Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- குந்தவை 9900022244
Date :- 30-09-0969
தேவி,
நந்தினியின் மிரட்டலை மீறி, ஆ.கரிகாலர் அருகிலேயே இருந்து அவரை பாதுகாத்து வருகிறேன். இருப்பினும் இங்கு நடைபெறும் பேச்சு வார்த்தைகளும், சம்பவங்களும் சற்று காரசாரமாகவே உள்ளன. 'என்ன நடக்குமோ?' என்று பயமாக உள்ளது.
பி.கு. :-
சக்ரவர்த்தி, பொன்னியின் செல்வர் இருவருக்குமே ஆபத்து இருப்பது போல உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கவும்.
x-----x
Sender :- கடம்பூர் சம்புவரையர் 9900050001
Receiver :- பெரிய பழுவேட்டையர் 9900040001
Date :- 30-09-0969
சோழ நாட்டின் பெருந் தனாதிகாரி அவர்களே,
வந்தியத் தேவன் இங்கு வந்து, இளவரசரிடம் ஏதோ சொல்லியுள்ளான். அதிலிருந்து, அவர், மட்டு மரியாதை இல்லாமல், அனைவரையும் எடுத்தெறிந்து பேசுகிறார். என் வீட்டில் ஏடாகூடம் ஏதும் நடந்து விடுமோ என்று அஞ்சுகிறேன்.
x-----x
Sender :- பெரிய பழுவேட்டையர் 9900040001
Receiver :- கடம்பூர் சம்புவரையர் 9900050001
Date :- 30-09-0969
சம்புவரையரே,
சோழ நாட்டை, இரண்டாக பிரிக்கும் யோசனைக்கு, கரிகாலன் ஒத்துக் கொண்டு, நாம் விரும்பியபடி காரியம் நடந்தால் நல்லது. இல்லையேல் மோசம் ஒன்றுமில்லை. Don't worry.
x-----x
Sender :- பெரிய பழுவேட்டையர் 9900040001
Receiver :- குந்தவை 9900022244
Date :- 30-09-0969
ஐயோ, இளவரசி,
சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் ஏற்பட்டதற்காக, என் அரண்மணையில், என் முதுகிற்கு பின்னே, எவ்வளவு பெரிய சதி இடம்பெற அனுமதித்துள்ளேன். நூற்றாண்டுகால பழுவூர் - சோழ உறவிற்கு களங்கம் எற்படுத்தி விட்டேனே. ஐயகோ! பாண்டியன் ஆபத்துதவிகள், ஒரே நாளில் அரசர் மற்றும் 2 இளவரசர்களின் உயிருக்கு குறி வைத்துள்ளனர். ஒரு நாசகாரியை, நல்லவள் என்று நம்பி, மனையாளாக்கியதன் வினை இது. அம்மணி, அரசரையும், அருள்மொழியையும் காப்பது உன் பொறுப்பு. கரிகாலனை காப்பாற்ற நானே கடம்பூர் செல்கிறேன்.
x-----x
Sender :- கடம்பூர் சம்புவரையர் 9900050001
Receiver :- சுந்தரச் சோழர் 9900011111
Date :- 03-10-0969
சோழ சக்ரவர்த்திக்கு,
கடம்பூர் அரசர் சம்புவரையர் வருத்தத்துடன் அனுப்பும் செய்தி. சேவூர் போர்க்களத்தில் பாண்டிய படைகளை சூறையாடிய இளவரசர் ஆதித்த கரிகாலர், இன்று எதிரிகளின் சூழ்ச்சியால் அகால மரணமடைந்தார். தங்கள் மகனை கொன்ற எதிரி வந்தியத்தேவனை சிறைப் பிடித்து வைத்துள்ளேன்.
x-----x
Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- குந்தவை 9900022244
Date :- 03-10-0969
Sorry இளவரசி. ஆ.கரிகாலரை காப்பாற்ற இயலவில்லை. என்னை மயக்கமடைய வைத்து, கரிகாலரை கொலை செய்து உள்ளார்கள். But, பழியை என் மீது போடுகிறார்கள். என்னை காப்பாற்றுங்கள்.
பி.கு.:-
பெ.பழுவேட்டையர் மனது வைத்தால் என்னை நிச்சயம் காப்பாற்றலாம்.
x-----x
Sender :- குந்தவை 9900022244
Receiver :- அருள்மொழி வர்மர் 9900033333
Date :- 06-10-0969
தம்பி,
கடவுள் அருளால், நீயும், தந்தையும் உயிர் தப்பி விட்டீர்கள். எனினும், கரிகாலனை கொலை செய்ததாக பழி சுமத்தப்பட்டு வந்தியத்தேவர் சிறைபட்டிருக்கிறார். அவருக்கு நீ உதவ வேண்டும்.
x-----x
Sender :- அருள்மொழி வர்மர் 9900033333
Receiver :- குந்தவை 9900022244
Date :- 06-10-0969
அக்கா,
அண்ணனை கொலை செய்ய வந்தியத்தேவரை, நான்தான் ஏவியுள்ளேன் என்று கடம்பூர்காரர்கள் வதந்தி பரப்பியுள்ளனர். சிறை நிர்வாகத்தை வேறு, சி.பழுவேட்டையரிடமிருந்து வலுக்கட்டாயமாக பெரிய வேளார், பூதி விக்கிரமகேசரி பறித்துள்ளார். வந்தியத்தேவர் நிரபராதி என்பதை நன்கு அறிந்தும், என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறேன்.
x-----x
Sender :- குந்தவை 9900022244
Receiver :- அருள்மொழி வர்மர் 9900033333
Date :- 07-10-0969
தம்பி,
மக்கள் அனைவரும் அடுத்த அரசராக உன்னையே ஆக்க வேண்டும் என்கின்றனர். பெரிய வேளாளரிடம் பேசினேன். அவரும் அதையே வலியுறுத்துகிறார். நீ அரசராகி, வ.தேவரை விடுதலை செய்ய கட்டளையிட்டால், அதை விருப்பத்துடன் obey பண்ணுவதாய் கூறுகிறார். what to do? I'm also in confusion.
x-----x
Sender :- அருள்மொழி வர்மர் 9900033333
Receiver :- குந்தவை 9900022244
Date :- 07-10-0969
அக்கா,
நீ confuse ஆவதில் அர்த்தமே இல்லை. பெரிய வேளாளர் நிர்பந்தித்தாலும், நீயே வலியுறுத்தினாலும், மக்கள் போராட்டமே நடத்தினாலும், நான் அரசராக விரும்பவில்லை. அனாவசியமாய் என் மீது, சிறு சந்தேகம் எற்படுவதையும் விரும்பவில்லை. வந்தியத்தேவரை கடவுள் காப்பாற்றுவார்.
x-----x
Sender :- குந்தவை 9900022244
Receiver :- அருள்மொழி வர்மர் 9900033333
Date :- 08-10-0969
தம்பி,
கரிகாலன் கொலையுண்ட சமயத்தில், நடந்த விஷயத்தை அறிந்த ஒரே நபர் பெ.பழுவேட்டையர்தான். அவர் உண்மையைக் கூறினால், வ.தேவர் தப்பிப்பார். எனினும், அவரை கேள்வி கேட்க, தந்தையே விரும்ப மாட்டாரே? அவராக உண்மையை கூறினால்தான் உண்டு.
x-----x
Sender :- பெரிய பழுவேட்டையர் 9900040001
Receiver :- சுந்தரச் சோழர் 9900011111
Date :- 10-10-0969
மகாராஜா,
இளவரசரை காப்பாற்ற முடியாததற்கு என்னை மன்னிக்கவும். இளவரசரை கொன்றது என் மனைவி நந்தினியே. எனக்குத் தெரியாமலேயே, என் முதுகிற்கு பின்னே, இந்த சதியை நடத்தி முடித்து தப்பி ஓடி விட்டாள். இதற்கு தார்மீக பொறுப்பேற்று என்னை நானே மாய்த்துக் கொள்கிறேன். வந்தியத்தேவன் நிரபராதி. மேலும், சோழநாட்டு மகுடத்திற்கு மதுராந்தகனை விட பொன்னியின் செல்வரே தகுதியானவர். மக்களும் அவரையே விரும்புகின்றனர். அவரையே அடுத்து அரசராக்கவும். வாழ்க சோழநாடு.
x-----x
Sender :- அருள்மொழி வர்மர் 9900033333
Receiver :- சுந்தரச் சோழர் 9900011111
Date :- 12-10-0969
அப்பா,
அண்ணன் கொலையுண்ட சிறிது நாட்களில் தம்பி அரியணை ஏறினால், என் மீதுதான் தவறான சந்தேகம் வரும். என் சிற்றப்பா மதுராந்தகர், என்னை விட வயதில் மூத்தவர். சிவபக்தர். அரசராக எல்லா தகுதியும் உடையவர். அவரையே, அரசராக நியமிக்கும்படி தங்களை கேட்டுக் கொள்கிறேன் அவரின் கீழ் சாதாரண வீரனாய் பணிபுரியவே நான் விரும்புகிறேன்!
x-----x
Sender :- CHOLACEL Service centre 9900099000
Receiver :- All CHOLACELLERS 99000xxxxx
Date :- 20-10-0969
அன்பு குடிமக்களே,
என் தம்பியும், கண்டராதித்தரின் புதல்வனும், சிறந்த சிவநேசனுமாகிய மதுராந்தகன் என்ற உத்தமச் சோழனை இன்று முதல் அரசனாக மகுடம் சூட்டுகிறேன். அவர் ஆட்சியில் சோழர் குலம் தழைத்தோங்க வாழ்த்துகிறேன். அடுத்தவாரம், என் செல்வ புதல்வி குந்தவைக்கும், வாணர் குல வீரர் வந்தியத் தேவனுக்கும் சிறப்பான முறையில் திருமணம் நடைபெற உள்ளது. அனைத்து குடிமக்களும் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்தும்படி அன்புடன் வரவேற்கிறேன்.
இந்த சந்தோஷ நிகழ்வுகளுக்கு பரிசாக, அனைத்து குடிமக்களும், Lifetime free incoming வசதியுடன் கூடிய Simcardம், "Cholokia" செல்ஃபோன் ஒன்றையும் இலவசமாக பெற்றுக் கொள்ளவும்! வாழ்க சோழநாடு!!
- சுந்தரச் சோழர்.
x-----x
கதை வாசித்த சில இணைய நண்பர்கள், பல characters பற்றி கேட்டிருந்தார்கள். அவர்களுக்காக,
1. ஆழ்வார்கடியான், அநிருத்தரின் messages CRIPT ஆகி உள்ளதால் அதனை decode பண்ணும் வேலை நடைபெறுகிறது.
2.பூங்குழலி cellஐ bay of bengalல் தவற விட்டு விட்டாள்.
3. வானதி cellஐ கொடும்பாளுரில் மறந்து வைத்து விட்டாள்.
4. ரவிதாஸன் ரோமிங்கில் இருப்பதால் cellஐ use பண்ணவே இல்லை.
5. ஊமை ராணிக்கு பலவித ringtones கேட்டதால்தான் பைத்தியம் பிடித்துள்ளது.
6.மணிமேகலை games ஆட மட்டுமே cellphone உபயோகித்துள்ளாள்.
-ஸ்ரீதேவி
** மணிமேகலை பிரசுரம் “என் பள்ளிக்கூடத்திற்கு வந்த ரோபோ” சிறுகதை தொகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற கதை**
No comments:
Post a Comment