Sunday, July 01, 2007

யார் நான்


"பூபூபூர்ணா" மிக மெதுவாக அழைத்தவாறே அவளருகில் சென்றான்.

ஒரு நிமிடம் இருவராலுமே பேச முடியவில்லை. ஒருவரை ஒருவர் பரவசமாக பார்த்தவாறே நின்றிருந்தனர். பூர்ணா மெதுவாக புன்னகைக்க ஆரம்பித்து, உடைந்த பெரிய சிரிப்போடு பிரவீனின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். அவள் வாயிலிருந்து "பிரவீன் பிரவீன்" என்ற வார்த்தை மட்டும் வந்து கொண்டிருந்தது.

பிரவீன் மெதுவாக அவளை தன் கழுத்திலிருந்து பிரித்தான், "நெஜமாவே ஜெயிச்சுட்டோம்!!!!" அவன் கண்களிலிருந்தும் லேசாக கண்ணீர் வழிந்தது.

"ம்ம்" என்று தலையசைத்துவிட்டு மறுபடியும் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

"நாளைக்கே டிக்ளேர் பண்ணிருவோம். முதல்ல டெமான்ஸ்ட்ரேஷனுக்கு பெர்மிஷன் வாங்கனும். அப்புறம் இன்டர்நேஷனல்.." பேசிக் கொண்டே போனவனின் வாயைப் பொத்தினாள்.

"பிரவீன்! என்னோட சின்ன வயசுக் கனவு, இன்னைக்கு நனவாயிருக்கு. அந்த சந்தோஷத்தை நான் இன்னைக்கு முழுமையா அனுபவிக்க விரும்பறேன். அடுத்தது என்னங்கிறதைப் பத்தி, இப்ப, இன்னைக்கு யோசிக்க வேண்டாம். இன்னைக்கு முழுக்க நான் சந்தோஷமா இருக்க மட்டும் விரும்பறேன். என்ன? புரியுதா?" கொஞ்சலாக கேட்டாள்.

வாயை மூடியிருந்த அவள் சின்ன விரல்களை மெதுவாக பிரித்து "புரியுது" என்று சொல்லிவிட்டு, அந்த விரல்களில் முத்தமிட்டான்.

"மியூசிக் போடேன். நல்ல மெலடியா.."

அவளை அணைத்திருந்த கையை விலக்காமலே, ரிமோட்டை எடுத்து பிளேயரை ஆன் செய்தான். சத்தத்தை மிகக் குறைவாக வைத்தான். மெல்லிய தாள கதியில், சாக்ஸஃபோனும் வயலினும் கலந்து, கரைந்து மயக்க ஆரம்பித்தது.

சிணுங்கிய செல்ஃபோனை சைலன்ட் மோடில் மாற்றி விட்டு, அருகிலிருந்த குஷனில் தூக்கி எறிந்தான்.

அவளை அப்படியே அலாக்காக தூக்கி, படுக்கையில் வைத்து, மார்பில் சாய்த்துக் கொண்டான்.

"ஏய்! கவிதையெல்லாம் சொல்லுவியே! இப்ப ஏதாவது சொல்லேன்டா. கேக்குறேன்!"

"உடனே கேட்டா எப்படி?"

"உடனே உன்னால ஒன்னு எழுத முடியாதா? எனக்காக ஒன்னே ஒன்னு!!" அந்த கொஞ்சலில் பிரவீன் அப்படியே கிறங்கிப் போனான். அவள் முகத்தை நிமிர்த்தி, கண்களுக்குள் ஆழமாக பார்த்தான்.

"இறுக்கி அணைக்கும்
போதெல்லாம்
பற்றி எரிகிறது
மோகத் திரியில்
காமத் தீ
"

"ம். அப்புறம்."

"முத்தமழை பொழிந்ததை
அணைத்திடவா என்
செல்ல மேகமே!
"

"பிரவீன். நாம ஒரு குழந்தையோட நிறுத்திடக் கூடாது. எனக்கு அட்லீஸ்ட் நாலாவது வேணும். அப்பத்தான் அவங்களுக்கு..."

சட்டென்று அவள் முகத்தை நிமிர்த்தி, அவள் இதழ்களில் இதழ் பதித்தான்.

ஒரு நிமிடத்துக்குப்பின் அவள் முகத்தை விடுவித்து...

"முத்தம் செய்த காயத்தில்
வழியும் ரத்தம் உறைய
மீண்டும் வை முத்த....
"

அவன் கழுத்தை வளைத்து அவன் இதழ்களை மூடினாள். இப்பொழுது அவள் முறை!

அவன் கைகள் மெதுவாக இரவு விளக்கைத் தவிர, மற்றெல்லாவற்றையும் அணைத்தது.

------------------------->>>>>>>>>>><<<<<<<<<<<<<-------------------------

பிரவீன் படுக்கையிலிருந்து விழித்தபொழுது, மணி ஆறாகி பத்து நிமிடம் ஆகியிருந்தது. அருகில் பூர்ணா இன்னும் உறங்கி கொண்டிருந்தாள், அவன் தோளில் தலை வைத்து. மெதுவாக அவள் தலைக்கு தலையணை கொடுத்துவிட்டு, படுக்கையிலிருந்து எழுந்தான்.

ஹாலில், கம்பீரமாக அந்த மெஷின் இன்னும் விழித்து கொண்டிருந்தது. பெருமிதத்தோடு அதன் அருகில் சென்றான்.

அப்பொழுது செல்ஃபோன் குஷனில் அதிர்ந்துவிட்டு அமைதியடைந்தது. எடுத்துப் பார்த்தான்.

'32 மிஸ்டு கால்ஸ்!!!'
'யாரெல்லாம் கூப்பிட்டிருக்கா?' என்று நினைத்தவாறு மிஸ்டு கால்ஸ் லிஸ்ட்டைப் பார்த்தான்.
'என்னது?' திரும்பி படுக்கையை பார்த்தான்.

செல்ஃபோன் மறுபடியும் அதிர்ந்தது. அழைப்பை ஒரு வினாடி பார்த்தான். படுக்கையிலிருந்த பூர்ணாவை பார்த்தவாறே பச்சை பட்டனை அழுத்தினான்.

"ஹலோ, நான் பூர்ணா பேசறேன். குட் மார்னிங்டா!!!"

- தொடரும்

4 comments:

Geetha Sambasivam said...

சைன்ஸ் ஃபிக்க்ஷன்?

யோசிப்பவர் said...

//சைன்ஸ் ஃபிக்க்ஷன்?//
ஆம். ஏன் இந்த சந்தேகம்?

நளாயினி said...

'32 மிஸ்டு கால்ஸ்!!!'
'யாரெல்லாம் கூப்பிட்டிருக்கா?' என்று நினைத்தவாறு மிஸ்டு கால்ஸ் லிஸ்ட்டைப் பார்த்தான்.
'என்னது?' திரும்பி படுக்கையை பார்த்தான்.

செல்ஃபோன் மறுபடியும் அதிர்ந்தது. அழைப்பை ஒரு வினாடி பார்த்தான். படுக்கையிலிருந்த பூர்ணாவை பார்த்தவாறே பச்சை பட்டனை அழுத்தினான்.

"ஹலோ, நான் பூர்ணா பேசறேன். குட் மார்னிங்டா!!!"

கிழிஞ்சிது கிருஸ்ணகிரி எண்டானாம்.

ம்..ம்.. கவிதை நல்லா இருக்கு.

யோசிப்பவர் said...

//ம்..ம்.. கவிதை நல்லா இருக்கு//
இரண்டு என்னோடது. இரண்டு நண்பர் நிலாரசிகனோடது