Wednesday, June 22, 2005

வரம்

ஒரு ஊரில் ஒரு மீனவன். மிகவும் ஏழை, ஆனால் அறிவாளி. ஒரு நாள் அவன் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபொழுது, அவன் வலையில் ஒரு ஜாடி அகப்பட்டது. அதை திறந்ததும் ஒரு பெரிய பூதம் வந்தது.

வெளியே வந்த பூதம்,"என்னை விடுதலை செய்த உனக்கு இரண்டு வரம் தருகிறேன். கேள்." என்றது.

மீனவன் சிறிது யோசித்துவிட்டு "எனக்கு நூறு கோடி ரூபாய் வேண்டும். இதுதான் முதல் வரம்."

பூதம், "சரி. இரண்டாவது வரம்?"

மீனவன், "இன்னும் இரண்டு வரம் வேண்டும்."

6 comments:

Muthu said...

:-)

G.Ragavan said...

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நல்ல கதை.

அன்புடன்,
கோ.இராகவன்

யோசிப்பவர் said...

நன்றி

வினையூக்கி said...

யோசிப்பவரே, இதுவும் நல்லா இருக்கு.

யோசிப்பவர் said...

நன்றி வினையூக்கி!!!

Venkata Ramanan S said...

He he :)