Showing posts with label தொடர். Show all posts
Showing posts with label தொடர். Show all posts

Thursday, October 17, 2013

எண்பது நாட்களில் உலகை சுற்றிய பயணம்

”எண்பது நாட்களில் உலகத்தை சுற்றி வர தன்னால் முடியும் என்று கதையின் நாயகர் பீலியாஸ் போக், தன் நண்பர்களிடம், மிகப் பெரிய தொகையை பந்தயம் கட்டுகிறார். அன்றிரவே லண்டனிலிருந்து பயணத்தை தொடங்கியும் விடுகிறார்!

நீராவி இன்ஜின்கள், புகை வண்டிகளைத் தவிர வேறெந்த இயந்திர வாகனங்களும் கண்டுபிடிக்கப்படாத 1872ம் வருடம் அது. புயல், மழை தாமதங்கள், ரயில் தாமதங்கள், செவ்விந்திய கொள்ளையர்கள் என பலவித இடைஞ்சல்கள் வருகின்றன. வங்கிக் கொள்ளையராய் இருப்பாரோ என்ற சந்தேகம் வேறு அவரைத் துரத்துகிறது. பயணிகள் கப்பல், ரயில், வணிக கப்பல், பாய்மரப் படகு, பனிச்சறுக்கு படகு, யானைப் பயணம் என்று அனைத்து வித வழிகளிலும் பயணம் செய்கிறார். இறுதியில் பந்தயத்தில் வெல்கிறாரா? அல்லது தன் சொத்தை இழக்கிறாரா? அல்லது உண்மையில் அவர் கொள்ளையர்தானா?
பரபரப்பாக நகரும் கதையின் இறுதியில் வரும் எதிர்பாராத திருப்பமே, நூறாண்டுகளுக்கும் மேலாக, இன்றும், இக்கதையை வெற்றிகரமானதாக ரசிக்க வைக்கின்றது...!”

நாடு, மொழி, இனம் கடந்து பல தலைமுறைகளால் ரசிக்கப்படும், பிரபல ஃபிரன்சு எழுத்தாளர் ஜூல் வெர்னேவின் சாகாவரம் பெற்ற நாவல் “AROUND THE WORLD IN EIGHTY DAYS" தமிழில், ஸ்ரீதேவியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது..!

நாவலை வாங்க விருப்பமுள்ளவர்கள் நுழைய வேண்டிய இணைப்பு
http://www.amazon.com/Around-World-eighty-Jules-Version/dp/1456559222/ref=sr_1_1?s=books&ie=UTF8&qid=1381986449&sr=1-1&keywords=sridevi

Monday, September 09, 2013

பொன்னியின் ‘செல்’வன்


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- குந்தவை 9900022244
Date :- 30-09-0969


தேவி,

நந்தினியின் மிரட்டலை மீறி, ஆ.கரிகாலர் அருகிலேயே இருந்து அவரை பாதுகாத்து வருகிறேன். இருப்பினும் இங்கு நடைபெறும் பேச்சு வார்த்தைகளும், சம்பவங்களும் சற்று காரசாரமாகவே உள்ளன. 'என்ன நடக்குமோ?' என்று பயமாக உள்ளது.

பி.கு. :-

சக்ரவர்த்தி, பொன்னியின் செல்வர் இருவருக்குமே ஆபத்து இருப்பது போல உள்ளது.  அவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கவும்.

x-----x



Sender :- கடம்பூர் சம்புவரையர் 9900050001
Receiver :- பெரிய பழுவேட்டையர் 9900040001
Date :- 30-09-0969


சோழ நாட்டின் பெருந் தனாதிகாரி அவர்களே,

வந்தியத் தேவன் இங்கு வந்து, இளவரசரிடம் ஏதோ சொல்லியுள்ளான். அதிலிருந்து, அவர், மட்டு மரியாதை இல்லாமல், அனைவரையும் எடுத்தெறிந்து பேசுகிறார். என் வீட்டில் ஏடாகூடம் ஏதும் நடந்து விடுமோ என்று அஞ்சுகிறேன்.

x-----x


Sender :- பெரிய பழுவேட்டையர் 9900040001
Receiver :- கடம்பூர் சம்புவரையர் 9900050001
Date :- 30-09-0969


சம்புவரையரே,

சோழ நாட்டை, இரண்டாக பிரிக்கும் யோசனைக்கு, கரிகாலன் ஒத்துக் கொண்டு, நாம் விரும்பியபடி காரியம் நடந்தால் நல்லது. இல்லையேல் மோசம் ஒன்றுமில்லை. Don't worry.

x-----x


Sender :- பெரிய பழுவேட்டையர் 9900040001
Receiver :- குந்தவை 9900022244
Date :- 30-09-0969


ஐயோ, இளவரசி,

சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் ஏற்பட்டதற்காக, என் அரண்மணையில், என் முதுகிற்கு பின்னே, எவ்வளவு பெரிய சதி இடம்பெற அனுமதித்துள்ளேன். நூற்றாண்டுகால பழுவூர் - சோழ உறவிற்கு களங்கம் எற்படுத்தி விட்டேனே. ஐயகோ! பாண்டியன் ஆபத்துதவிகள், ஒரே நாளில் அரசர் மற்றும் 2 இளவரசர்களின் உயிருக்கு குறி வைத்துள்ளனர். ஒரு நாசகாரியை, நல்லவள் என்று நம்பி, மனையாளாக்கியதன் வினை இது. அம்மணி, அரசரையும், அருள்மொழியையும் காப்பது உன் பொறுப்பு. கரிகாலனை காப்பாற்ற நானே கடம்பூர் செல்கிறேன்.

x-----x


Sender :- கடம்பூர் சம்புவரையர் 9900050001
Receiver :- சுந்தரச் சோழர் 9900011111
Date :- 03-10-0969


சோழ சக்ரவர்த்திக்கு,

கடம்பூர் அரசர் சம்புவரையர் வருத்தத்துடன் அனுப்பும் செய்தி. சேவூர் போர்க்களத்தில் பாண்டிய படைகளை சூறையாடிய இளவரசர் ஆதித்த கரிகாலர், இன்று எதிரிகளின் சூழ்ச்சியால் அகால மரணமடைந்தார். தங்கள் மகனை கொன்ற எதிரி வந்தியத்தேவனை சிறைப் பிடித்து வைத்துள்ளேன்.

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- குந்தவை 9900022244
Date :- 03-10-0969


Sorry இளவரசி. ஆ.கரிகாலரை காப்பாற்ற இயலவில்லை. என்னை மயக்கமடைய வைத்து, கரிகாலரை கொலை செய்து உள்ளார்கள். But, பழியை என் மீது போடுகிறார்கள். என்னை காப்பாற்றுங்கள்.

பி.கு.:-

பெ.பழுவேட்டையர் மனது வைத்தால் என்னை நிச்சயம் காப்பாற்றலாம்.


x-----x


Sender :- குந்தவை 9900022244
Receiver :- அருள்மொழி வர்மர் 9900033333
Date :- 06-10-0969


தம்பி,

கடவுள் அருளால், நீயும், தந்தையும் உயிர் தப்பி விட்டீர்கள். எனினும், கரிகாலனை கொலை செய்ததாக பழி சுமத்தப்பட்டு வந்தியத்தேவர் சிறைபட்டிருக்கிறார். அவருக்கு நீ உதவ வேண்டும்.

x-----x


Sender :- அருள்மொழி வர்மர் 9900033333
Receiver :- குந்தவை 9900022244
Date :- 06-10-0969


அக்கா,

அண்ணனை கொலை செய்ய வந்தியத்தேவரை, நான்தான் ஏவியுள்ளேன் என்று கடம்பூர்காரர்கள் வதந்தி பரப்பியுள்ளனர். சிறை நிர்வாகத்தை வேறு, சி.பழுவேட்டையரிடமிருந்து வலுக்கட்டாயமாக பெரிய வேளார், பூதி விக்கிரமகேசரி பறித்துள்ளார். வந்தியத்தேவர் நிரபராதி என்பதை நன்கு அறிந்தும், என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறேன்.

x-----x


Sender :- குந்தவை 9900022244
Receiver :- அருள்மொழி வர்மர் 9900033333
Date :- 07-10-0969


தம்பி,

மக்கள் அனைவரும் அடுத்த அரசராக உன்னையே ஆக்க வேண்டும் என்கின்றனர். பெரிய வேளாளரிடம் பேசினேன். அவரும் அதையே வலியுறுத்துகிறார். நீ அரசராகி, வ.தேவரை விடுதலை செய்ய கட்டளையிட்டால், அதை விருப்பத்துடன் obey பண்ணுவதாய் கூறுகிறார். what to do? I'm also in confusion.

x-----x


Sender :- அருள்மொழி வர்மர் 9900033333
Receiver :- குந்தவை 9900022244
Date :- 07-10-0969


அக்கா,

நீ confuse ஆவதில் அர்த்தமே இல்லை. பெரிய வேளாளர் நிர்பந்தித்தாலும், நீயே வலியுறுத்தினாலும், மக்கள் போராட்டமே நடத்தினாலும், நான் அரசராக விரும்பவில்லை. அனாவசியமாய் என் மீது, சிறு சந்தேகம் எற்படுவதையும் விரும்பவில்லை. வந்தியத்தேவரை கடவுள் காப்பாற்றுவார்.

x-----x


Sender :- குந்தவை 9900022244
Receiver :- அருள்மொழி வர்மர் 9900033333
Date :- 08-10-0969


தம்பி,

கரிகாலன் கொலையுண்ட சமயத்தில், நடந்த விஷயத்தை அறிந்த ஒரே நபர் பெ.பழுவேட்டையர்தான். அவர் உண்மையைக் கூறினால், வ.தேவர் தப்பிப்பார். எனினும், அவரை கேள்வி கேட்க, தந்தையே விரும்ப மாட்டாரே? அவராக உண்மையை கூறினால்தான் உண்டு.

x-----x


Sender :- பெரிய பழுவேட்டையர் 9900040001
Receiver :- சுந்தரச் சோழர் 9900011111
Date :- 10-10-0969


மகாராஜா,

இளவரசரை காப்பாற்ற முடியாததற்கு என்னை மன்னிக்கவும். இளவரசரை கொன்றது என் மனைவி நந்தினியே. எனக்குத் தெரியாமலேயே, என் முதுகிற்கு பின்னே, இந்த சதியை நடத்தி முடித்து தப்பி ஓடி விட்டாள். இதற்கு தார்மீக பொறுப்பேற்று என்னை நானே மாய்த்துக் கொள்கிறேன். வந்தியத்தேவன் நிரபராதி. மேலும், சோழநாட்டு மகுடத்திற்கு மதுராந்தகனை விட பொன்னியின் செல்வரே தகுதியானவர். மக்களும் அவரையே விரும்புகின்றனர். அவரையே அடுத்து அரசராக்கவும். வாழ்க சோழநாடு.

x-----x

Sender :- அருள்மொழி வர்மர் 9900033333
Receiver :- சுந்தரச் சோழர் 9900011111
Date :- 12-10-0969


அப்பா,

அண்ணன் கொலையுண்ட சிறிது நாட்களில் தம்பி அரியணை ஏறினால், என் மீதுதான் தவறான சந்தேகம் வரும். என் சிற்றப்பா மதுராந்தகர், என்னை விட வயதில் மூத்தவர். சிவபக்தர். அரசராக எல்லா தகுதியும் உடையவர். அவரையே, அரசராக நியமிக்கும்படி தங்களை கேட்டுக் கொள்கிறேன் அவரின் கீழ் சாதாரண வீரனாய் பணிபுரியவே நான் விரும்புகிறேன்!

x-----x


Sender :- CHOLACEL Service centre 9900099000
Receiver :- All CHOLACELLERS 99000xxxxx
Date :- 20-10-0969

அன்பு குடிமக்களே,

என் தம்பியும், கண்டராதித்தரின் புதல்வனும், சிறந்த சிவநேசனுமாகிய மதுராந்தகன் என்ற உத்தமச் சோழனை இன்று முதல் அரசனாக மகுடம் சூட்டுகிறேன். அவர் ஆட்சியில் சோழர் குலம் தழைத்தோங்க வாழ்த்துகிறேன். அடுத்தவாரம், என் செல்வ புதல்வி குந்தவைக்கும், வாணர் குல வீரர் வந்தியத் தேவனுக்கும் சிறப்பான முறையில் திருமணம் நடைபெற உள்ளது. அனைத்து குடிமக்களும் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்தும்படி அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த சந்தோஷ நிகழ்வுகளுக்கு பரிசாக, அனைத்து குடிமக்களும், Lifetime free incoming வசதியுடன் கூடிய Simcardம், "Cholokia" செல்ஃபோன் ஒன்றையும் இலவசமாக பெற்றுக் கொள்ளவும்! வாழ்க சோழநாடு!!

- சுந்தரச் சோழர்.

x-----x

கதை வாசித்த சில இணைய நண்பர்கள், பல characters பற்றி கேட்டிருந்தார்கள். அவர்களுக்காக,

1. ஆழ்வார்கடியான், அநிருத்தரின் messages CRIPT ஆகி உள்ளதால் அதனை decode பண்ணும் வேலை நடைபெறுகிறது.
2.பூங்குழலி cellஐ bay of bengalல் தவற விட்டு விட்டாள்.
3. வானதி cellஐ கொடும்பாளுரில் மறந்து வைத்து விட்டாள்.
4. ரவிதாஸன் ரோமிங்கில் இருப்பதால் cellஐ use பண்ணவே இல்லை.
5. ஊமை ராணிக்கு பலவித ringtones கேட்டதால்தான் பைத்தியம் பிடித்துள்ளது.
6.மணிமேகலை games ஆட மட்டுமே cellphone உபயோகித்துள்ளாள்.
-ஸ்ரீதேவி

** மணிமேகலை பிரசுரம் “என் பள்ளிக்கூடத்திற்கு வந்த ரோபோ” சிறுகதை தொகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற கதை**

Saturday, September 07, 2013

பொன்னியின் ‘செல்’வன்


Sender :- குந்தவை 9900022244
Receiver :- வந்தியத்தேவன் 9900077007
Date :- 14-08-0969


வந்தியத்தேவரே,

நீர் உடனே இலங்கை சென்று என் இளைய தம்பி அருள்மொழிவர்மனை அழைத்து வரவும்.

பி.கு.:-

அரச குலத்தவரிடம் அதிகபிரசங்கித்தனம் இல்லாமல் சற்று பணிவாக இருப்பது நல்லது.

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- குந்தவை 9900022244
Date :- 14-08-0969


பெருமதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய குந்தவை தேவிக்கு!

தங்கள் தம்பிக்கு ஒரு SMS அனுப்பக்கூடாதா? இதற்காக நான் கடல் கடந்து செல்ல வேண்டுமா?

பி.கு.:-

எப்படி என் பணிவு?!

x-----x


Sender :- குந்தவை 9900022244
Receiver :- வந்தியத்தேவன் 9900077007
Date :- 14-08-0969


வாணர் குல வீரரே(?),

இலங்கையில் தற்போது போர்க்காலமாக இருப்பதால், செல்ஃபோன் லைன்கள் சரிவர வேலை செய்யவில்லை. எனவேதான் உம்மை அனுப்புகிறேன்.

பி.கு.:-

கடல் பயணம் செய்ய அவ்வளவு பயமா? சரியான பயந்தாங்கொள்ளியாக இருப்பீரோ? சின்ன பழுவேட்டையரிடம் சிக்காமல் கவனமாக சென்று வரவும்!

x-----x

Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- குந்தவை 9900022244
Date :- 12-09-0969


தேவி!

இலங்கை அநுராதபுரத்தில் இருந்து தங்கள் தம்பியை அழைத்து வந்த கதையை, ஒரு அத்தியாயமே எழுதலாம். நேரில், I will explain it(தங்களின் காந்தக் கண்கள் என்னை

Disturb செய்யாமல் இருந்தால்!). Now, நானும் பொன்னியின் செல்வரும், யானைத் துறவில் இருந்து, கப்பலில் நாகப்பட்டினத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம். என் வேலையை வெற்றிகரமாக முடித்து விட்டு, தங்களின் மலர்ந்த முகத்தை தரிசிக்க ஆவலாக உள்ளேன்.

பி.கு.:-

தங்களின் இதய சிம்மாசனம் காலியாக உள்ளதா?

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- குந்தவை 9900022244
Date :- 17-09-0969


இளவரசி,

வழியில் புயற்காற்றினால், கப்பல் கவிழ்ந்து accident. But, Narrow escape. இளைய இளவரசர் நாகை புத்தர் கோவிலில் உள்ளார். அவருக்கு காய்ச்சல் வேறு. புத்த துறவிகள் இளவரசருக்கு மருத்துவ உதவிகள் செய்து வருகிறார்கள். I'm on the way to palayaarai.

பி.கு.:-

தங்களின் வேலையை அரைகுறையாக முடித்ததற்கு மன்னிக்கவும்.

x-----x


Sender :- அருள்மொழி வர்மர் 9900033333
Receiver :- குந்தவை 9900022244
Date :- 20-09-0969


அக்கா,

இறைவன் அருளாலும், நாகை பிட்சுகளின் தீவிர வைத்தியத்தினாலும், I'm fine. விரைவில் உன்னை நேரில் சந்திக்கிறேன். நீ அனுப்பிய தூதர், வெகு கெட்டிக்காரர். சிறந்த வீரர். அவராலேயே நான் இன்று உயிருடன் இருக்கிறேன்.

x-----x


Sender :- குந்தவை 9900022244
Receiver :- வந்தியத்தேவன் 9900077007
Date :- 20-09-0969


இனியவரே!

என் தம்பி உடல்நிலை செய்தி அறிந்து கடந்த 3 நாட்களாக கவலையில் இருந்தேன். ஆகவேதான், தங்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. Now, he is fine. அன்பரே!

தங்களின் வேலையை சிறப்பாகவே செய்து முடித்துள்ளீர்கள். இதற்காக, சோழர் குலமே தங்களுக்கு என்றென்றும் கடன்பட்டுள்ளது. நான்...

என் இதய சிம்மாசனத்தில் தங்களுக்கு மட்டுமே இடம் உண்டு!

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- குந்தவை 9900022244
Date :- 20-09-0969


தேவி,

நானோ வீடு, வாசல், பெற்றோர், உற்றோர் இல்லாத அனாதை. நீங்களோ, பரந்து விரிந்துள்ள சோழ சாம்ராஜ்ய சக்ரவர்த்தியின் ஒரே செல்வகுமாரி. தங்களின் தூய்மையான

இதயத்தில் நான் இடம்பிடித்தது, பெறற்கரிய பாக்கியமாகவே கருதுகிறேன். தங்களின் மணிக் கரங்களை பற்றுதற்குரிய அந்நன்னாள் விரைவில் வாராதோ?

x-----x


Sender :- நந்தினி 9900040002
Receiver :- ஆதித்த கரிகாலன் 9900022222
Date :- 22-09-0969


அரசிளங்குமரா,

நான், பழுவூர் இளையராணி நந்தினி. இராஜ்ய குழப்பங்களை பேசித் தீர்க்க கடம்பூர் அரண்மனைக்கு வருவீர்களா? Expecting your reply.

x-----x


Sender :- ஆதித்த கரிகாலன் 9900022222
Receiver :- நந்தினி 9900040002
Date :- 22-09-0969


பழுவூர் பாட்டி அவர்களே,

இன்று சோழ இராஜ்யத்தையே விரல் நுனியில் ஆட்டிப் படைக்கும் சர்வ வல்லமை படைத்த, நந்தினி தேவியாரின் கோரிக்கையை மீற நான் யார்? கண்டிப்பாக வருகிறேன்.



Sender :- குந்தவை 9900022244
Receiver :- ஆதித்த கரிகாலன் 9900022222
Date :- 23-09-0969


அண்ணா,

நந்தினி பிறப்பால் பாண்டிய நாட்டாள். வீரபாண்டியன் ஆபத்துதவிகளிடம் அவளுக்கு தொடர்பு உள்ளது. அவள் உன்னை கடம்பூர் அரண்மனைக்கு அழைப்பதில் வேறு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. எனவே, அவளின் கடம்பூர் அழைப்பை நிராகரித்து விடு.

x-----x


Sender :- குந்தவை 9900022244
Receiver :- வந்தியத்தேவன் 9900077007
Date :- 25-09-0969


வந்தியத்தேவரே,

நந்தினி கரிகாலனை பேச்சுவார்த்தை நடத்த கடம்பூர் அரண்மனைக்கு அழைத்திருக்கிறாள். வீரபாண்டியன் மறைவுக்கு பழிவாங்க முற்படுகிறாளோ என சந்தேகிக்கிறேன்.

கரிகாலன் என் பேச்சை மீறி கடம்பூர் செல்கிறான். அவனை எப்படியாவது தடுத்து நிறுத்த முயற்சிக்கவும். அது முடியவில்லையெனில், அவனருகிலேயே இருந்து அவனை பாதுகாக்கவும்.

x-----x


Sender :- நந்தினி 9900040002
Receiver :- வந்தியத்தேவன் 9900077007
Date :- 26-09-0969


வந்தியத்தேவா,

அந்த பழையாறை பிசாசின் பேச்சைக் கேட்டு கடம்பூர் வந்தால், உமக்கு பல பிரச்சனைகள் வரும். ஏற்கனவே, ஒருமுறை என்னை ஏமாற்றியதற்கும் சேர்த்து கடுமையான விளைவுகளை சந்திப்பீர்.

தொடரும்...

Friday, September 06, 2013

பொன்னியின் ‘செல்’வன்


பொன்னியின்  செல்வன் - முன் குறிப்பு
இந்தக் கதை பொன்னியின் செல்வன் கதையை கிண்டல் செய்யும் 

நோக்கத்துடன் எழுதப் பட்டதல்ல. பொன்னியின் செல்வன் கதையின் பால் 

ஏற்பட்ட ஈர்ப்பினாலேயே எழுதப் பட்டது.

- ஸ்ரீதேவி

தஞ்சாவூருக்கு அருகேயுள்ள சித்திரக்குடி என்னும் கிராமத்தில், சமீபத்தில்

நடந்த அகழ்வாராய்ச்சியில், Archeological Survey of Indiaவிற்கு, 1000

வருடத்திற்கு முந்தைய Hard disk கிடைத்துள்ளது. அதன் databaseஐ

ஆராய்ந்த போது, "CHOLACEL" என்ற செல்ஃபோன் கம்பெனியின் SMS

விபரங்கள் அதில் இருந்ததன. ASI வெளியிட்டுள்ள அந்த databaseல்

இருந்து, சில interesting SMSs இதோ....



Sender :- ஆதித்த கரிகாலன் 9900022222
Receiver :- வந்தியத்தேவன் 9900077007
Date :- 03-08-0969


நண்பா! வந்தியத்தேவா!

என் தந்தை சுந்தரச் சோழரை, பழுவேட்டையர்கள் இருவரும்

சந்தேகிக்காதபடி, எவ்வாறாவது நேரில் சந்தித்து, கீழ்கண்ட Messageயை

காண்பிக்கவும். பின்பு, என் தங்கை குந்தவையை contact பண்ணவும். என்

சிற்றப்பா மதுராந்தகனை அடுத்த அரசனாக்க பழுவேட்டையர்கள் சதி

செய்கிறார்கள். எனவே கவனமாக காரியத்தை முடிக்கவும்.


Message Attached :-

Dad,

வீரபாண்டியனின் ஆபத்துதவிகளால், தங்களுக்கு அபாயம் அதிகரித்துள்ளது.

இராஜ்யத்திலும் குழப்பமான நிலை உள்ளது. எனவே, காஞ்சியில் நான்

கட்டியுள்ள பொன்மாளிகைக்கு உடனே கிளம்பி வரவும்.

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- நந்தினி 9900040002
Date :- 08-08-0969


பெரிய பழுவேட்டையரின் இளைய ராணி நந்தினி தேவிக்கு,

தஞ்சை சாலையில், என்னுடைய குதிரை மீது தங்களின் பல்லக்கு

மோதியதே? நினைவுள்ளதா? வாணர் குல வந்தியத் தேவன் நான் தான். I

need one help. அரசர் சுந்தரச் சோழரை நேரில் சந்திக்க ஆசை. Help பண்ண

முடியுமா?

x-----x


Sender :- நந்தினி 9900040002
Receiver :- வந்தியத்தேவன் 9900077007
Date :- 08-08-0969


கோட்டைக் காவலர் சின்ன பழுவேட்டையருக்கு Message அனுப்புகிறேன்.

அவர் உம்மை அரண்மனையினுள் செல்ல அனுமதி அளிப்பார். பதிலுக்கு

உம்மால் எனக்கும் சில காரியங்கள் ஆக வேண்டியுள்ளது. அரசரை மீட்

பண்ணியதும் என்னை நேரில் சந்திக்க வேண்டும். O.K.யா?

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- நந்தினி 9900040002
Date :- 08-08-0969


O.K.

x-----x


Sender :- நந்தினி 9900040002
Receiver :- சின்ன பழுவேட்டயர் 9900040003
Date :- 08-08-0969


வந்தியத்தேவன் என்பவர் அரசரை பார்க்க வருவார். Allow பண்ணவும்.

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- ஆதித்த கரிகாலன் 9900022222
Date :- 10-08-0969


இளவரசே,

தங்கள் தந்தையை நேரில் Meet பண்ணி, Messageயை காண்பித்து விட்டேன்.

But, அரசர் காஞ்சிக்கு வரும் moodல் இல்லை. சி.பழுவேட்டையர் என்னை

ஒற்றன் என சந்தேகிக்கிறார். Anyway, நான் அவரை ஏமாற்றி தப்பி

விட்டேன்.

x-----x


Sender :- நந்தினி 9900040002
Receiver :- வந்தியத்தேவன் 9900077007
Date :- 10-08-0969


வந்தியத்தேவரே,

தங்களை ஒற்றன் என்று சின்ன பழுவேட்டையர் சந்தேகிக்கிறார். என்னை

ஏமாற்றி விட்டீரோ? எனக்கு அலுவல் புரிய வருவீரா?

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- நந்தினி 9900040002
Date :- 10-08-0969


மேடம்,

நான் குந்தவைக்கு வேலை புரிய வந்துள்ளேன். So, தங்களுக்கு help பண்ண

முடியாமைக்கு வருந்துகிறேன். Anyway, Thanks for your help.

x-----x


Sender :- ஆதித்த கரிகாலன் 9900022222
Receiver :- குந்தவை 9900022244
Date :- 10-08-0969


குந்தவை,

எந்த வேலையையும் வெற்றிகரமாக முடிக்க கூடிய வீரன் வேண்டுமென்று

கேட்டிருந்தாயே? என் நண்பன் வந்தியத்தேவன், உன்னை விரைவில் contact

பண்ணுவான். His No is 9900077007.

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- குந்தவை 9900022244
Date :- 14-08-0969


சோழர் குல விளக்கு! பழையாறை இளவரசி! சேவூர் போரில்

வீரபாண்டியனின் தலை கொய்த ஆ.கரிகாலனின் அன்பு தங்கை!

பொன்னியின் செல்வர் அருள்மொழியின் பிரியமுள்ள தமக்கை! தங்கத்

தலைவி! சிங்கச் செல்வி! இளைய பிராட்டி குந்தவை தேவியாரே!

நான் வந்தியத்தேவன். இளவரசர் ஆ.கரிகாலரின் கட்டளையின் பேரில்

வந்துள்ளேன். I'm at your service.

தொடரும்...

Wednesday, September 04, 2013

Y4K

6.Y4K

டைம் மிஷின் நின்று கொண்டிருந்த இடம், ஆள் அரவமற்று இருந்தது.

‘இலக்கை அடைந்து விட்டோம்’ என்று ஸ்கிரீனில் ஓடிக் கொண்டிருந்தது.

என் நெஞ்சம் படபடவென்று அடித்தது. கதவைத் திறப்பதற்கு முன்,

ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்தேன். யாருமே கண்ணில்

தென்படவில்லை. கதவைத் திறந்து, இருவரும் கீழே குதித்தோம்.

டைம் மிஷினை ஒரு மரத்திற்கு பின்னால் பார்க் பண்ணிவிட்டு, கிளை

தழைகளை உடைத்து, மறைவாக மூடி வைத்தோம். பிறகு, சென்னை

செல்லும் வழியில் நடக்க ஆரம்பித்தோம்.

இரண்டு நிமிடங்கள் கூட நடந்திருக்க மாட்டோம். வாகன ஒலி, சைரன் ஒலி

என்று அடுத்தடுத்து கேட்க, ஐந்து கார்கள் எங்கள் அருகே கிறீச்சிட்டு

நின்றன. அதில் இருந்து திபுதிபுவென்று யூனிபார்ம் பெண்கள் பலர்

இறங்கினர். ஜெராக்ஸ் எடுத்தது போல, அனைவரும் ஒரே மாதிரியாக

இருந்தனர். முகத்தில் முரட்டுத்தனம் தெரிந்தது. கைகளில் குழல் போன்ற

ஒன்றை பிடித்து இருந்தனர். அவர்கள் அதைப் பிடித்திருந்த ஸ்டைலைப்

பார்த்தால், அது லேசர் துப்பாக்கியாக இருக்கலாம்.

எங்களை சூழ்ந்து கொண்ட ஜீனிஸுக்கள், தங்களுக்குள் ஏதோ ஒரு ரகசிய

மொழியில் பேசிக் கொண்டனர். அவர்களில் இரண்டு பட்டை சட்டை அணிந்த

ஜீனிஸ் பெண் மட்டும் எங்கள் அருகே வந்து, செந்தமிழில் கேட்டாள்.

“யார் நீங்கள்?”

குரல் கர்ண கடூரமாய் ஒலித்தது. அதில் தெரிந்த கடுமை எனக்குள்

நடுக்கத்தை உண்டு பண்ணியது.

“நான் ரேகா. இது என் நண்பர் சதீஷ்.”

“ஓ... கடிதப் புகழ் ரேகா. எட்டு கண்ணீர் கடிதங்கள் எழுதி இந்தியாவையே

ஒரு கலக்கு கலக்கியவர், இல்லையா?”

அந்தப் பெண் குரலை உயர்த்திப் பேசினாலும், அந்த பேச்சிலோ, முகத்திலோ

உற்சாகம் எதுவும் தென்படவில்லை. பிறகு எங்களைப் பார்த்து,

“ம்...ஏறுங்கள். உங்களை உபசரிப்பதற்காக எங்கள் தலைவி காத்துக்

கொண்டிருக்கிறார்”, என்று கூறி எங்களை ஒரு வாகனத்தில் ஏறச் சொல்லி

அவசரப்படுத்தினாள்.

“வெயிட். நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரிய வேண்டாமா?”

“நாங்கள் இந்திய பாதுகாப்புப் படையினர். உங்களை அழைத்து வரச்

சொல்லி, தலைவி எங்களைப் பணித்துள்ளார். ஆகவே, தலைவியை காக்க

வைக்காமல், உடனே கிளம்புங்கள்.”

ரேகா உற்சாகமாய் அவர்களின் வண்டியில் ஏறி அமர, நான் அரைமனதோடு,

தயங்கி தயங்கி ஏறினேன். இரண்டு பட்டை சட்டைக்காரி, ஒரு ஜீனிஸை

மட்டும் தனியாக அழைத்து, அவளிடம் ஏதோ கூற, அவள் தலையை

அசைத்து விட்டு, கீழேயே நின்றாள். மற்றவர்கள் வண்டியில் ஏறியதும்,

வண்டி ஸ்டார்ட் ஆனது. தனியாக விடப்பட்ட ஜீனிஸ் என்ன செய்கிறாள்

என்று தெரிந்து கொள்ள தலையைத் திருப்பி பார்த்தேன். அவள் நேராக,

டைம் மிஷினை மறைத்து வைத்த இடத்திற்கு சென்று, புதர்களை விலக்கி

எங்கள் டைம் மிஷினை விடுவித்தாள். என் மனதில் திக்கென்று ஒரு பயம்

ஒட்டிக் கொண்டது. அப்போது என்னருகில் உட்கார்ந்திருந்த ஜீனிஸ், என்

காதருகே கூறினாள்.

“பயப்பட வேண்டாம். உங்கள் கால இயந்திரம் பத்திரமாகவே இருக்கும்”

நாங்கள் உட்கார்ந்திருந்த வண்டிக்கு முன்னால் இரண்டு வண்டிகள், பின்னால்

இரண்டு வண்டிகள் என்று சென்று கொண்டிருந்தன. நாங்கள்

விருந்தாளிகளாய் செல்கிறோமா அல்லது சிறையாளிகளாய் செல்கிறோமா

என்ற ஒரே சந்தேகம்தான் என் மனதை வாட்டியது.

ஆனால் ரேகாவோ ஜாலியாக இருந்தாள். வாகன வடிவமைப்பு, வேகம்,

சுற்றியுள்ள கட்டிடங்கள் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்.

நானும் வேகத்தை கவனிக்க, அது மணிக்கு 3500km என்று காட்டியது. அந்த

வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்ததை எங்களால் உணரவே

முடியவில்லை.

பத்து நிமிடத்தில் எங்களின் வாகன பயணம் முடிந்தது, ஒரு

பிரம்மாண்டமான பலமாடி கட்டிடம் முன்பு வண்டி நின்றது. உள்ளே

சென்றோம்.

அது ஒரு அலுவலகம். வேலைகள் அனைத்தையும் அங்கு இயந்திரங்களே

செய்து கொண்டிருந்தன. கிட்டத்தட்ட இரண்டாயிரம் இயந்திரங்களுக்கு மேல்,

அந்த ஆபிஸில் உள்ளன என்று கணக்கிட்டேன். அத்தனை

இயந்திரங்களையும் மேற்பார்வையிட, பத்து ஜீனிஸுக்கள் மட்டுமே

இருந்தார்கள். இதுதான் இந்திய நாட்டின் தலைமை செயலகமாய்

இருக்குமோ?

லிப்டில் பல மாடிகளை ஏறிய பின்பு, வெளிவந்தோம். அங்கு இருந்த

அலுவலக அறையை தாண்டிய பின்பு, ஒரு அலங்கரிக்கப்பட்ட அறை

வந்தது. கதவில் ‘இந்திய நாட்டுத் தலைவி’ என்ற தங்க எழுத்துக்கள்

மின்னின. அதன் கதவைத் திறந்து, உள்ளே அழைத்து செல்லப் பட்டோம்.

அது ஒரு விஸ்தாரமான அறையாக இருந்தது. மிக மிக ஆடம்பரமாக

அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த அறைக்குள், நடுநாயகமாய் ஒரு ஜீனிஸ்

பெண் உட்கார்ந்திருந்தாள். அவரை சுற்றி மேலும் பத்து ஜீனிஸுக்கள்

இருந்தார்கள். பாதுகாப்பு படையினர், எங்களை அறைக்குள் விட்டு விட்டு,

ஒன்றுமே பேசாமல் வெளியே சென்று விட்டனர்.

”ஆக, நீங்கள்தான் ரேகாவா?”, என்று நடுநாயக பெண்மணி கேட்டாள்.

“ஆம்”

“உங்களின் வருகை, இன்னமும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது”, என்று

அந்த ஜீனிஸ் கூறியது எனக்கு வித்தியாசமாகப்பட்டது.

ஆனால், ரேகா சந்தோஷமான குரலில், “நீங்கள்தான் இந்திய நாட்டுத்

தலைவியா?” என்று கேட்டாள்.

“ஆம்”

தலைவிக்கு ரேகா வணக்கம் செலுத்தினாள். ஆனால், அதற்கு தலைவி

ரெஸ்பான்ஸ் எதுவும் பண்ணாமல், அருகில் இருந்த ஜீனிஸிடம் ஏதோ கூற,

அவர்கள் புன்முறுவலித்தார்கள். எனக்கு சற்று கலக்கமாகவே இருந்தது.

“என் அழைப்பை நம்பி நீங்கள் வந்துள்ளது இன்னமும் என்னை

ஆச்சரியமூட்டுகிறது. மனிதர்கள் புகழ்ச்சிக்கு எளிதில் அடிமை ஆகி

விடுவார்கள் என்று என் ஆலோசகியான இவர் கூறிய போது, நான் நம்பவே

இல்லை”, என்று கூறிய தலைவி இடி இடியென்று சிரித்தாள். மற்ற

ஜீனிஸுக்களும் அவளோடு சேர்ந்து சிரிக்க, ரேகாவும் கலவரமடைந்தாள்.

“மேடம், யூ மீன் டு ஸே, நீங்கள் எங்களை ஏமாற்றி வரவழைத்துள்ளீர்களா?”

”பின், உங்களுக்கு விருதும், விருந்தும் கொடுப்பதற்காக வரவழைத்தேன்

என்றா நினைத்தீர்கள்?”

தலைவியின் குரலில் கடுமை அதிகரித்தது. எங்கள் முகத்தில் மிரட்சி

தெரிந்தது. நான் தலைவியிடம் கேட்டேன்.

“மேடம், என்னுடைய டி.சி. செய்திகள் பொய்யா? மனித வேட்டையை நீங்கள்

நிறுத்தி விட்டதாய், அது தவறாக கூறிவிட்டதா?”

“இல்லை, மிஸ்டர் சதீஷ். உங்கள் டி.சி. அருமையாக வேலை

செய்திருக்கிறது. உங்களுக்கு கிடைத்த செய்திகள் அனைத்தும் இங்குள்ள

தகவல் கேந்திர செய்திகள்தான். மனித வேட்டை எங்கள் நாட்டில் நிகழ்ந்து

கொண்டிருந்ததும் உண்மை. ரேகாவின் கடிதத்தால், அது நிறுத்தப்பட்டதும்

உண்மை. ரேகாவின் முதல் கடிதம் இங்கு வந்ததுமே, எங்கள் நாட்டில் பல

குழப்பங்கள் ஏற்பட்டன. எங்களின் செயலை ஜீனிஸ் பிரஜைகள் கடுமையாக

எதிர்த்தனர். நாங்களும், அவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து, மனிதக்

கொலைகளை உடனேயே நிறுத்தி விட்டோம். ஆனால்...”

“ஆனால்?”

“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, மிஸ்டர் சதீஷ்? டி.சி. என்பதே 3037ல்

கண்டுபிடிக்கப்பட்ட சாதனம்!”

“புரியவில்லையே”

“3037ம் வருடம் டெல்லியை சேர்ந்த ஒரு ஜீனிஸால், டி.சி.

கண்டுபிடிக்கப்பட்டது. அப்படித்தான் எங்கள் வரலாறும் உள்ளது. ஆனால்,

2063ம் வருட டி.சி. கதிர்கள், எங்கள் நாட்டு செய்தி கேந்திரத்திற்குள்

வந்ததை அறிந்ததும், எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. நிஜமாகவே,

உங்களின் கண்டுபிடிப்பு அபாரம். ஆனால், அந்த கண்டுபிடிப்புதான் உங்களை

இங்கு வரவழைத்து உள்ளது!”

“இன்னமும் எங்களுக்கு புரியவில்லை, மேடம்”, என்று கூறிய ரேகா, “நீங்கள்

எங்களை எதற்காக வரவழைத்தீர்கள்? எங்களை என்ன செய்யப்

போகிறீர்கள்? சதீஷின் டி.சி. சர்க்கியூட் வேண்டுமா? எங்களை மீண்டும்

2063க்கு அனுப்புவீர்களா? மாட்டீர்களா”, என்று அடுத்தடுத்து கேள்விகள்

கேட்டாள்.

“பொறுமை, ரேகா. சதீஷின் டி.சி. போலவே, உங்களின் கடிதங்களும் மிக மிக

அற்புதம். எத்தகைய கொடுங்கோலரின் மனத்தையும் உருக்கி விடக் கூடிய

சக்தி படைத்தது. கடவுளின் படைப்பை அடியோடு அழிக்க எந்த வகையிலும்

எங்களுக்கு உரிமை இல்லை என்ற உங்களின் கருத்தை பற்றி

விவாதித்தோம். அதன் அடிப்படையில் இரண்டு முடிவுகள் எடுத்தோம். முதல்

முடிவு, மனித வேட்டையை நிறுத்துவது. இரண்டாவது முடிவு உங்களை

இங்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பது!”

ரேகா இடைமறித்து ஏதோ கேட்க முற்பட, தலைவி சைகையால் தடுத்து,

மீண்டும் தொடர்ந்தாள்.

“உடனேயே, எங்களின் தகவல் தொடர்பு சாதன அலைவரிசையை மாற்றி

விட்டோம். அதனால் உங்களின் மற்ற கடிதங்கள் எங்கள் ஜீனிஸ்

பிரஜைகளிடம் சேரவே இல்லை! எங்களின் பழைய அலைவரிசையான 128.4

டெராஹெர்ட்சில் பொய்யான செய்திகளை உலவ விட்டோம். உங்களின்

கடிதங்களால் இங்கு மாற்றங்கள் நிகழ்வதாய் பிரமையை உண்டு

பண்ணினோம். உங்களுக்கு ஒரு விருது கொடுப்பதாகக் கூறி, வலை

விரித்தோம். டி.சி. மூலம் வேறு அலைவரிசையில் நீங்கள் தேடியிருந்தால்,

எங்களின் குட்டு உடைந்திருக்கும். விதியை மாற்ற யாரால் முடியும்?

எங்களை நம்பி, எங்கள் வலையில் விழுந்து விட்டீர்கள்!” என்று கூறி

முடித்தார்.

எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. வியர்வை ஆறாய் பெருக்கெடுத்து

ஓடியது. உடம்பு முழுவதும் உதறலாய் இருந்தது.

“என்ன காரணத்திற்காக எங்களை வரவழைத்து உள்ளீர்கள் மேடம்?”, என்று

நாக்குழறலாய் ரேகா கேட்டாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு, பின்பு தலைவி கூறினார்.

“தற்பாதுகாப்பிற்காக... உங்கள் வருடத்தில் உள்ள மனிதர்களுக்கு Y4K

விஷயம் என்னவென்பதோ, ஜீனிஸ் இனத்தை பற்றியோ எதுவுமே

தெரியாது. உங்கள் தலைவர்களுக்கு விஷயம் தெரிந்தால் என்ன

செய்வார்கள் என்று யோசித்தீர்களா? தங்களை விட ஒரு உயர் இனம் வரப்

போவதை அவர்கள் நிச்சயம் விரும்பமாட்டார்கள். உங்களிடம் கால

இயந்திரம் உள்ளது. எங்கள் ஜீனிஸின் ஆதி பிரஜையான குன்னூர் எழிலை

நீங்கள் அழிக்க முற்படுவீர்கள். அதன் மூலம் ஜீனிஸ் என்ற இனமே

தோன்றாதபடி பார்த்துக் கொள்வீர்கள்.

கடவுளின் படைப்பை அடியோடு அழிக்க எந்த வகையிலும் உரிமை இல்லை

என்ற உங்களின் வாசகத்தை நினைவு படுத்திக் கொள்ளுங்கள், ரேகா.

எங்களின் தற்பாதுகாப்பிற்காகவே உங்களை இங்கு ஏமாற்றி அழைத்து

வந்தோம்.”

“எங்களை என்ன செய்யப் போகிறீர்கள்?”

“பயப்படாதீர்கள். நாங்கள் உங்களை அழிக்க மாட்டோம். நீங்கள்

பாதுகாப்பாகவே இருப்பீர்கள். உணவு, தங்கும் வசதி அனைத்தும் உங்களுக்கு

கிடைக்கும். உங்களின் உடல் உழைப்பை சுரண்ட மாட்டோம். நீங்கள்

இருவரும் நண்பர்களா காதலர்களா என்று தெரியவில்லை. எப்படி

இருந்தாலும், உங்களை ஒன்றாகவே தங்க வைக்கப் போகிறோம். நீங்கள்

இங்கு சந்தோஷமாகவே இருப்பீர்கள்”, என்று தலைவி கூறி முடித்தார்.

எங்களால் பதில் பேச முடியவில்லை. என்ன பதில் சொல்ல முடியும்?

திகைத்துப் போய் நின்றோம்.

தலைவி பாதுகாப்பு படையினரை அழைத்து, அவர்கள் மொழியில் ஏதோ

கூறினார். அவர்கள் எங்கள் இருவரையும் அழைத்து - மன்னிக்கவும் -

இழுத்துக் கொண்டு செல்கின்றனர்.

”விதி...விதி...எல்லாம் என் தலைவிதி! பெண்களோட பேச்சக் கேட்கக்

கூடாதுன்னு நானே நிறைய பேருக்கு அட்வைஸ் பண்ணியிருக்கிறேன்.

அப்படி இருந்தும் இந்த முட்டாள் ரேகா பேச்சக் கேட்டு, இப்படி Y4K

பிரச்சனையில் மாட்டிக் கொண்டேனே... இந்த ராட்சசிங்க என்ன பண்ணப்

போறாங்களோ? நல்ல வேளை! இந்த ரேகாவும் என்னோட சேர்ந்து

மாட்டிகிட்டா! ஏதோ ஒருத்தனா இருந்து கஷ்டப்படுறத விட ரெண்டு பேரா

இருப்பது பெட்டர்தானே....! சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும்

பெண்களை நம்பாதேன்னு சும்மாவா சொல்றாங்க...!”

என்று புலம்பிக் கொண்டே நான் சென்று கொண்டிருக்கிறேன். ரேகா என்னை

முறைத்துக் கொண்டிருக்கிறாள்.

சில நாட்களுக்குப் பிறகு, வண்டலூர் மிருகக் காட்சி சாலையில், சிங்கம்,

புலி, சிறுத்தை என்று பலவித மிருகங்களும், நெருப்புக் கோழி, அல்பட்ராஸ்

போன்ற பறவைகளும், லேசர் கூண்டுகளில் அடைபட்டு இருக்கின்றன.

எல்லா கூண்டுகளும் சிறியதாகவே இருக்கின்றன. தென்திசை கடைசியில்

ஒரே ஒரு கூண்டு மட்டும் மிக மிகப் பெரியதாக இருக்கிறது. அதற்கு

உள்ளேயே, உணவு அறை, படுக்கை அறை என்று வசதியாக உள்ளது.

வெளியே போர்டில் ‘மனித இனம் - ஹோமோ சப்பியன்ஸ்’ என்று எழுதி

இருக்கிறது. அந்த கூண்டின் உள்ளே புல்தரையில் நானும் ரேகாவும் வாக்கிங்

சென்று கொண்டிருக்கிறோம்!
அப்போது, கூண்டுக்கு வெளியே ஒரு ஜீனிஸ்

கூட்டம் எங்களை வேடிக்கை பார்க்க வர, அவர்களை அழைத்து வந்த கைடு

ஜீனிஸ், “இது மனிதர்கள். நம்முடைய மூதாதையர்கள். இந்த இனத்திலும்

நம்மைப் போல, பெண்கள்தான் புத்திசாலிகளாக இருக்கிறார்கள்...! என்று

கூறிக் கொண்டு இருக்கிறாள். அந்த சோகமான நிலையிலும், ரேகா என்னைப்

பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டு இருக்கிறாள்!

** மணிமேகலை பிரசுரம் “என் பள்ளிக்கூடத்திற்கு வந்த ரோபோ” சிறுகதை தொகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற குறுநாவல்**

Tuesday, September 03, 2013

Y4K

5. ரேகாவின் கடிதங்கள்

“உன்னோட ஐடியா என்ன ரேகா”

“டி.சி. மூலமாக, 4000ல் உள்ள செய்தி கேந்திரத்திற்கு உன்னால் ஒரு தகவலை அனுப்ப முடியுமா?” என்று என்னிடம் எதிர் கேள்வி கேட்டாள்.

“உன் மைண்டில் என்ன ஓடுது?”

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடா”

“முடியும்”

“அப்படியானால், நான் கொடுக்கும் கடிதத்தை அங்கு அனுப்பு!”

“யாருக்கு கடிதம் எழுதப் போகிறாய்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“இந்திய நாட்டு தலைவிக்கு! அவர்களின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து எழுதப் போகிறேன். ஒரு உயிரை அழிக்க, அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை, சதீஷ்”, என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினாள்.

சிறிது நேரம் பேசாமல் இருந்த நான், பின்பு அவளிடம் கூறினேன்.

“இது ஒர்க் அவுட் ஆகாது, ரேகா. அவர்களை பொறுத்தவரையில் நாம் கீழான பிறவிகள்.”

“முயற்சி செய்து பார்ப்போம்”, என்று கூறிவிட்டு ஒரு பேப்பரை எடுத்துக் கொண்டு, தனியே சென்று விட்டாள். நானும் அவளை தொந்திரவு செய்யவில்லை.

பலமுறை வார்த்தைகளை யோசித்து எழுதினாள். அடித்தல், திருத்தல் பின்பு மீண்டும் யோசித்தல் என்று இரண்டு மணி நேரத்திற்கு மேல் அதற்கு செலவிட்டாள். ஒருவழியாய், அவளுக்கு திருப்தி அளிக்கக் கூடிய வகையில் அமைந்த ஒரு மூன்று பக்க கடிதத்தை, என்னிடம் காட்டினாள்.

சும்மா சொல்லக் கூடாது. ரேகா, மிகவும் திறமையாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து கடிதத்தை எழுதியுள்ளாள். ’ரேகாவின் கண்ணீர் கடிதம்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ள அந்தக் கடிதம், நிச்சயமாக ஜீனிஸுக்களிடம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது.

மனித உயிர்களின் பாதுகாப்பில்லாத, பயம் நிறைந்த வாழ்க்கையை உருக்கத்தோடு எழுதியிருந்தாள். ஜீனிஸுக்களின் கோபத்தை தூண்டாதவாறு, அவர்களை நாசுக்காக கண்டித்து இருந்தாள். பெண்கள் என்றாலே பொறுமைசாலிகள், இரக்கம் உள்ளவர்கள் என்ற பொதுவான கருத்தையே அழித்து விட்டீர்கள் என்று அங்கலாய்த்து இருந்தாள். ஒரு தனி நபரின் பாவபுண்ணிய பலன்கள், அவரின் குழந்தைகளுக்கு செல்வது போல, ஒரு நாட்டுத் தலைவியின் பாவ புண்ணிய பலன்கள், அந்த நாட்டு பிரஜைகளை போய் சேரும் என்று கூறி, ஜீனிஸ் பிரஜைகளையும் சாடியிருந்தாள்.

இந்தக் கடிதத்தை ஒரு வார்த்தை கூட மாற்றாமல் அப்படியே Y4Kக்கு அனுப்பினேன். ரேகாவின் கடிதம் சென்ற சில மணி நேரங்களிலேயே, அங்கு பரபரப்பு ஏற்பட ஆரம்பித்தது. ஜீனிஸ் பிரஜைகளுக்கு, அப்போதுதான் மனிதக் கொலைகள் நடந்து கொண்டிருந்தது தெரிந்தது. அது அவர்களிடையே கோபத்தை உண்டு பண்ணியது. அரசாங்கம் செய்து கொண்டிருந்த வேட்டையை உடனே நிறுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் போன்றவைகள் நடக்க ஆரம்பித்தன. மனித இன பாதுகாப்பு இயக்கம், உயிர்வதை எதிர்ப்பு இயக்கம் என்று பல இயக்கங்கள் உருவாகி, ஜீனிஸ் மக்களை, அரசுக்கு எதிராக ஒருங்கிணைத்தன. பொது ஜீனிஸின் திடீர் எதிர்ப்பால் கலங்கிப் போன இந்திய அரசு, இது குறித்து உயர்மட்ட கூட்டம் போட்டு, நல்ல முடிவு எடுப்பதாய் உறுதி அளித்தது.

ரேகா, தன்னுடைய இரண்டாவது கடிதத்தை அனுப்பினாள். இந்தியாவின் வரலாறு, பாரம்பரியம், அஹிம்சா சக்தி முதலியவைகளை சுட்டிக் காட்டி, நம்முடைய உயரிய பண்புகளை சிதைத்து விட வேண்டாம் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்து இருந்தாள்.

ஜீனிஸ் மத்தியில் ரேகாவின் புகழ் அதிகரித்தது. ரே.க.க. பல இடங்களில் பேசப்பட்டது. இதனால் அரசாங்க நிலையிலும் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. மனித வேட்டை முடிவு உலகளாவிய முடிவு என்றும், உலக நாட்டுத் தலைவிகளுடன் இந்தியா தொடர்பு கொண்டுள்ளது என்றும் அரசு அறிவித்தது. ரேகாவின் கருத்தை கருணையோடு பரிசீலித்து கொண்டிருப்பதாய் உறுதி அளித்தது.

ரேகா, தன்னுடைய அடுத்த கடிதத்தில், இந்தியா தன் முடிவை தானாக எடுக்க வேண்டும் என்றும், மற்ற நாடுகளின் நிர்பந்தத்திற்கு பணியக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தாள். இந்தியாவின் இறையாண்மையை பலி போட்டு விடக் கூடாது என்று வலியுறுத்தினாள்.

இவ்வாறு ரேகா, மொத்தம் எட்டு கடிதங்கள் அனுப்பினாள். அரசாங்கமும் அவளின் கோரிகையில் உள்ள நியாயத்தை உணர்ந்தது. தன்னுடைய இரண்டு வருட செயல்களை கண்டு வெட்கம் அடைந்தது. இதை அரசின் செய்தி குறிப்பில் குறிப்பிட்டு, மனித வேட்டைகள் இனி நடக்காது என்றும், இந்திய எல்லைக்குள், மனிதர்கள், பயமில்லாமல், பாதுகாப்பாக தங்களின் உரிமைகளை அனுபவித்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது.

அந்த அறிவிப்பைக் கண்டதும் எங்களின் உற்சாகம் பீறிட்டது.

“சக்ஸஸ்!”, என்று சின்னக் குழந்தை போல ரேகா குதித்தாள். “நாம் சாதித்து விட்டோம், சதீஷ், சாதித்து விட்டோம்.”

“இதை நாம் கொண்டாட வேண்டும்”, என்று கூறினேன்.

“ஆம், கண்டிப்பாக கொண்டாட வேண்டும். சினிமா, டின்னர் என்று ஒரு ரவுண்டு போவோம். அதற்கு முன்பு, அவர்களுக்கு ஒரு நன்றிக் கடிதம் அனுப்பிவிட்டு வருகிறேன்.”

ரேகாவின் நன்றி என்று தலைப்பிட்டு, தன்னுடைய நன்றியை ஒரு அருமையான கடிதமாய் அனுப்பினாள்.

பின்பு மெரினா பீச் சென்று, கடலில் காலை நனைத்துக் கொண்டே, இரண்டு மணி நேரம் நடந்தோம். உற்சாகத்தில் நேரம் போனதே தெரியவில்லை.ரிப்போர்ட் எப்படி தயாரிக்க வேண்டும் என்பதைக் குறித்து யோசித்தோம். எங்களுக்கு கிடைக்கப் போகும் புகழைப் பற்றி பேசினோம். பின்னர் ஒரு சைனீஷ் ரெஸ்டாரண்டில் நன்கு சாப்பிட்டோம். அதன் பின்பு நைட்ஷோ சினிமாவிற்கு சென்றோம். இரவு இரண்டு மணிக்கு, தாஸ்பிரகாஷில் இரண்டு இரண்டு ஐஸ்கிரீம்கள் சாப்பிட்டோம். மூன்று மணிக்கு மேல்தான் தூங்கப் போனோம்.

அடுத்த நாள், எங்களின் ரிப்போர்ட்டை தயாரித்துக் கொண்டிருந்தபோது, டி.சி. மூலம் Y4K தகவல்களை தற்செயலாய் பார்க்க, அதில் உள்ள ஒரு செய்தி எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

“தொடர்ந்து பல கடிதங்கள் எழுதி, எங்களை மனமாற்றம் செய்ய வைத்த ரேகாவிற்கு, இந்திய அரசு நன்றி தெரிவிப்பதோடு, நம் நாட்டின் உயரிய விருதான ’பாரத ராணி - 4000’ விருதை அவருக்கு அளித்து கௌரவப்படுத்த விரும்புகிறோம். ரேகா எங்கு இருந்தாலும், இங்கு வந்து, என்னை சந்தித்து, விருதை பெற்றுக் கொள்ளவும். ஒப்பம், இந்திய அரசின் தலைவி.” என்று எழுதி கையொப்பமிட்டு இருந்தது.

“இதற்கு என்ன அர்த்தம்?”, என்று கேட்டேன்.

“அதுதான் தெளிவாக கூறியுள்ளதே மடையா”, என்று உற்சாகத்துடன் கூறிய ரேகா, “வாவ்! என்ன ஒரு நல்ல வாய்ப்பு! நம்மை விட உயர் பிறவிகளான ஜீனிஸ் கைகளால் விருது. அதுவும் அவர்கள் நாட்டின் உயரிய விருது. நம்முடைய ரிப்போர்ட்டோடு சேர்த்து, இந்த விருது சர்டிபிகேட்டையும் இணைத்து சமர்ப்பித்தால், உலகமே வாயில் விரலை வைக்காது?” என்று குதூகலித்தாள்.

நான் உடனடியாக பதில் பேசவில்லை. சிறிது நேரம் அமைதியாய் இருந்தேன். அதற்குள் ரேகா ஏதேதோ உற்சாகம் பீறிட பேசிக் கொண்டே இருந்தாள். பிறகு, சட்டென்று நிறுத்தி,
“ஏய், ஏன் அமைதியாக இருக்கிறே?”, என்று கேட்டாள்.

“இந்த விருதை வாங்க நீ Y4Kக்கு போகப் போகிறாயா?”

“போகப் போகிறோம், சதீஷ், போகப் போகிறோம்.”

“ஆர் யூ ஷ்யூர்? இதற்காக Y4kக்கு நேரில் செல்லத்தான் வேண்டுமா?”

“உனக்கு, இன்னமும் ஜீனிஸ் மீது நம்பிக்கை வரவில்லையா?”

“அதில்லை... இருந்தாலும்...” என்று இழுத்தேன்.

“ஷட் அப் சதீஷ். முதலில் உன்னுடைய டி.சி.யை நம்புகிறாயா, இல்லையா?”

“நம்புகிறேன்.”

“அது சரியான தகவலைத்தான் கொண்டு வருகிறது என்பதில் சந்தேகமில்லையே?”

“நிச்சயமாய் இல்லை”

“தென்?”

“என்ன இருந்தாலும், இது யுத்த பூமிக்கு உள்ளே செல்வது போல் அல்லவா?”

“யுத்தம் முடிந்து விட்டது. அவர்கள் மாறிவிட்டார்கள். அவர்கள் கூற்றில் உனக்கு உண்மை தெரியவில்லையா? நேற்றுதான் நம்முடைய வெற்றியை உற்சாகமாய் கொண்டாடினோம். அதற்குள்ளாக மாறி விட்டாயே”, என்று ஆதங்கத்துடன் கேட்டாள்.

சிறிது நேர யோசனைக்குப் பின், தயக்கத்துடன் ஓகே சொன்னேன்.

ரேகாவின் முகம் மீண்டும் மலர்ந்தது. என் கையை குலுக்கினாள். “குட் சதீஷ், தைரியமாக ஒரு முடிவை எடுத்துள்ளாய்”, என்று கூறி விட்டு, என்னை அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

அங்கு ஒரு மூலையில் டைம் மிஷின் இருந்தது. அதன் கதவைத் திறந்து கொண்டு, உள்ளே இருந்த இருக்கையில் அமர்ந்தோம். செகண்ட் ஹேண்ட் வண்டியாக இருந்தாலும், பிரமாதமாய் இருந்தது. உள்ளே அமர்ந்ததும், டோர் லாக் பட்டனை அழுத்த, கதவு இறுகப் பூட்டிக் கொண்டது. பின்பு செல்ல வேண்டிய தேதி, வருடத்தை டைம் மிஷின் கேட்க, அதை ரேகா டைம் செய்தாள். செல்ல வேண்டிய லொக்கேஷனுக்கு, “எங்கு?” என்று என்னிடம் கேட்டாள். “பிஸி சிட்டி வேண்டாம். சென்னைக்கு அவுட்டரிலேயே போய் இறங்குவோம்”, என்றேன். உடனே, அதற்கு தக்கபடி அட்சரேகை, தீர்க்கரேகை டிகிரிகளை டைப் செய்தாள். பிறகு, சிறுசிறு டேட்டாக்களை ஒவ்வொன்றாக எண்டர் பண்ணினாள். டைம் மிஷின் ஸ்கிரீனில், “மிஷின் தயார் நிலையில் உள்ளது. கோ பட்டனை அழுத்தவும்” என்று வந்தது.

“போகலாமா?”, என்று ரேகா கேட்டாள்.

“எதற்கும் ஒருமுறை நன்றாக யோ...” என்று நான் வாக்கியத்தை கூறி முடிப்பதற்குள், ரேகா ’கோ’ பட்டனை அழுத்தி விட்டாள்.

அடுத்து Y4K...

Monday, September 02, 2013

Y4K

4.ஹோமோ ஜீனியஸ்


நான் போன் பேசி முடித்த பத்து நிமிடங்களுக்குள் ரேகா என் வீட்டிற்கு வந்து விட்டாள். Y4K விஷயத்தை சொல்லு என்று அவசரப்படுத்தினாள்.

“ஹோமோ ஜீனியஸ் தான் காரணம்”, என்றேன்.

“அப்படி என்றால்?”

“முதல்ல அமைதியாக இரு. அதை ஒரு கதை போல சொல்ல வேண்டும்.”

ஆனால், அவளோ பொறுமையில்லாமல், டி.சி. மிஷின் அருகே சென்று, பிரிண்டரில் இருந்து வந்த பேப்பர்களில், 4000ம் வருட பிரிண்ட் அவுட்டை எடுத்து பார்த்தாள். எனக்கு போலவே, அவளுக்கும் எதுவும் புரியவில்லை போலும். அவள் முகமே அதைக் காட்டியது.

“நான் தெளிவாக்குகிறேன், ரேகா. அதற்கு முன்பு உன்னிடம் ஒரு கேள்வி. உனக்கு பரிணாம வளர்ச்சி தத்துவம் தெரியுமா?”

“டார்வின் தியரிதானே? நன்றாகத் தெரியும்.”

“தென், உயிரினங்கள் தோன்றிய வரலாறை கூறு பார்ப்போம்.”

ரேகா சொல்ல ஆரம்பித்தாள்.

“சுமார் முன்னூறு கோடி வருடங்களுக்கு முன்பு, பூமியில் உயிரினமே கிடையாது. ஹைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன், நைட்ரஜன் போன்ற எளிமையான தனிமங்கள் மட்டுமே இருந்தன. அப்போது ஏதோ ஒரு அதிர்வினால் அல்லது மின்னல் தாக்குதலால், இந்த தனிமங்கள் ஒன்று சேர்ந்து, கொழகொழவென்ற ஒரு வஸ்துவாக, கடலில், தற்செயலாய் உருவானது. அதுதான் உலகின் முதல் உயிர். அதற்கு லூக்கா என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளார்கள்.

சூழ்நிலை காரணங்களால், அந்த உயிரினங்கள், தனக்குத் தானே உறுப்புக்களை உருவாக்க ஆரம்பித்தன. இடம் பெயர செதில்கள், வாய், காது போன்றவைகள் உருவாயின. கடல் பாசி, பூஞ்சை, முதுகெலும்பில்லாத கடல் உயிரினங்கள், மீன்கள் போன்றவைகள் பல்வேறு காலத்தில் தோன்றியது.”

"குட், ஒரு கட்டத்தில் இந்த நீர்வாழ் உயிரினங்கள் கடலிலிருந்து சுதந்திரம் அடைந்து, நிலத்திற்கு செல்ல விரும்பியது. அப்போது ஒரு பெரிய பரிணாம மாற்றம் ஏற்பட்டு, அம்ஃபிபியன்கள் எனப்படும் கடல்-நில வாழ் உயிரினங்கள் தோன்றியன”

“தவளை, முதலை போன்றவைகள், இல்லையா?”

“ஆமாம், அவைகள் மேலும் பரிணாம வளர்ச்சி அடைந்ததால், பறவைகள், பூச்சிகள், டைனசர்கள், விலங்குகள் போன்றவை பலப்பல கால கட்டங்களில் உருவாயின”

“அந்த விலங்கினத்தில் உள்ள குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றினான், இல்லையா?”, என்று ரேகா கேட்டாள்.

“எக்ஸாக்ட்லி! அனால் அந்த மாற்றம் உடனடி நிகழ்வாய் நடக்கவில்லை. சிம்பன்ஸி, ஏப் முதலிய உயர்ரக குரங்குகள், மரங்களை விட்டு விட்டு, நிலத்தில் வசிக்க பழகியன. அதுதான் குரங்கு மனிதன். பின்பு, அவன் இரண்டு கால்களால் நடக்க ஆரம்பித்தான். ’ஹோமோ எரக்டஸ்’ என்று அழைக்கப்படும் அந்த ஆதிகால மனிதனின் பிரதான தன்மையே நிமிர்ந்த நடைதான். அதனால், அவன் முன்னங்கால்கள் சுதந்திரமடைந்து, வேறு வேலைகளுக்கு பயன்பட ஆரம்பித்தன. அதேசமயம், மற்றொரு பரிணாம மாற்றமும் அவனுள் நிகழ்ந்தது. அதுதான் மூளையின் அளவு அதிகரிப்பு. இதனால், அவனின் புத்திசாலித்தனமும் பெருக பெருக ’ஹோமோ சப்பியன்ஸ்’ எனப்படும் நாகரீக மனிதர்களான நாம் உருவானோம். அந்த புத்திசாலித்தனத்தில் தோன்றியதுதான், நெருப்பு, சக்கரம் முதலிய ஆதிகால கண்டுபிடிப்புகளிலிருந்து, கம்ப்யூட்டர், டைம் மிஷின் போன்ற இந்த கால கண்டுபிடிப்பு வரை!”

“இதெல்லாம் எல்லோரும் அறிந்த விஷயம்தானே?”

சிறிது நேர மௌனத்திற்கு பின்பு அவளிடம் கேட்டேன்.

“வெல், ஹோமோ சப்பியன்ஸ் என்று அழைக்கப்படும் நம்முடைய மனித இனம், மேலும் பரிணாம வளர்ச்சி அடைந்தால் எத்தகைய உயிரினம் தோன்றும்?”

என்னுடைய கேள்வியை உடனடியாக ரேகா மறுத்துக் கூறினாள்.

”நாம்தான் சுப்பீரியர் உயிரினம்! நாம் பரிணாம வளர்ச்சி அடைய அவசியமே இல்லை!”

“இங்குதான் நீ தவறிழைக்கிறாய், ரேகா. பரிணாம மாற்றம் என்பது, நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தானே வந்துவிடும். யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதில்தான் கடவுளின் செயல் வெளிப்படுகிறது!”

நான் தத்துவம் பேசுவதாக நினைத்தாளோ என்னவோ? ரேகா பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

“இன்னும் நூறு வருடங்களில், நம்மை விட இரண்டு மடங்கு மூளை, பத்து மடங்கு புத்திசாலித்தனத்தோடு உள்ள உயிரினம் தோன்றப் போகிறது!”

“தோன்றப் போகிறதா!”, வியப்புடன் கேட்டாள் ரேகா.

“யெஸ். குன்னூரில் நீ போய் பார்த்தாயே, எழில், அவள்தான் அந்த இனத்தின் முதல் உயிர். அதிக மூளை, அதிக நோய் எதிர்ப்பு சக்தி உடைய குள்ள மனிதர்கள் இனம்... தெளிவாகக் கூறினால், குள்ளப் பெண்கள் இனம் உருவாகப் போகிறது. பலவித இயந்திரங்கள், ஆயுதங்கள் முதலியவற்றை தயார் செய்து, அதன் உதவியோடு பூமியையே ஆட்சி செய்யப் போகும் அவர்கள், தங்களை ‘ஹோமோ ஜீனியஸ்’ அல்லது ‘ஜீனிஸ்’ இனமாகக் கூறிக் கொள்வார்கள்!”

“எனக்கு இன்னமும் தெளிவாகவில்லை”

மேஜையில் கிடந்த பிரிண்ட் அவுட்டில் ஒன்றை எடுத்து காண்பித்துக் கொண்டே, “இதோ பார். இந்த 2700ம் வருட செய்திகளைப் பார். குள்ளப் பெண்கள் பற்றிய செய்திகள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் இருப்பதைப் பார். அந்த காலகட்டத்தில், உலக மக்கள் தொகையில், வெறும் ஒன்பது சதவீதத்தினராகவே அவர்கள் இருப்பார்கள். என்றாலும் அவர்களிடம் உள்ள அதீத நோய் எதிர்ப்பு சக்தியால், அவர்களின் சராசரி ஆயுட்காலம் 180 வருடங்களாய் இருக்கும். மேலும், அந்த ஜீனிஸ் இனத்தில், பெண்கள்தான் எண்பது சதவீதம் இருப்பார்கள். இதனால், அவர்களின் எண்ணிக்கை படுவேகமாய் அதிகரிக்கும்.”

“ஆண் ஜீனிஸ்?”

“ஆண் ஜீனிஸுக்கள், பெண்களைப் போல, அதிக புத்தியுடையவர்களாக இல்லை. பெண் ஜீனிஸுக்கள், அவர்களை உடல் உழைப்புக்கும், இனவிருத்திக்கும் மட்டுமே பயன்படுத்துவார்கள்.”

“பெண்களுக்கு புத்திசாலித்தனம் அதிகம் என்பது தெரிந்த விஷயம்தானே!”, என்று ரேகா கூறினாள்.

“நீ உன் புராணத்தை ஆரம்பிக்காதே. இந்த ஜீனிஸ் பெண்களால்தான் Y4K பிரச்சனை பூதாகரமாய் ஆகியுள்ளது.”

“எப்படி?”, என்று கேட்டாள்.

“கி.பி. 3000ம் வருடத்தில் ஜீனிஸின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 17 சதவீதம். இதோ, இந்த பேப்பரில் உள்ள புள்ளிவிபரத்தை பார். ஆனால், அடுத்த முப்பது வருடங்களில் நிலைமை தலைகீழாய் மாறிவிடும். அந்த சமயம், உலகம் முழுவதும் பரவவிருக்கும் ஒரு கொடிய வைரஸ் நோயால், மனித இனமே கொத்து கொத்தாய் மடிந்து விடும். அதே சமயம், ஜீனிஸுக்களை, இந்த நோய் தாக்கப் போவதில்லை. 3050ம் வருட செய்தியைப் பார். அப்போது இந்தியா, மக்கள் தொகையில், உலகில் 86ம் இடத்தில் இருக்கிறது.”

“.......”

“பிறகு, 3100ம் வருடத்தில், ஜீனிஸ் தொகை, நம்மைவிட அதிகமாகி விடும். ஆட்சி, அதிகாரம், தொழில், நிதி, வேலை வாய்ப்பு, விவசாயம், பாதுகாப்பு என்று அனைத்துமே அவர்கள் கைக்கு மாறிவிடும். நம்மவர்கள் இரண்டாம் பட்ச குடிமக்களாக மாறி விடுவர். இந்த நிலை மேலும் உக்கிரமடைந்து, 3500ம் வருடத்தில், நம் மனித இனத்தினர், அடிமை வேலை செய்தால்தான் பிழைக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படுவர். அடிமை வியாபாரத்திற்கென்றே பல கம்பெனிகள் விளம்பரம் செய்திருப்பதை, இந்த பேப்பரில் பார்”, என்று அவளுக்கு 3508ம் வருட செய்தித் தாளை நீட்டினேன்.

அவள் முகத்தில், இப்போது பய ரேகை தெரிந்தது. திகைத்துப் போய் இருந்தாள். நான் மீண்டும் தொடர்ந்தேன்.

“3997ம் வருடம், ஒரு ஜீனிஸ் புண்ணியவதி, ஒரு ஆராய்ச்சி பேப்பர் சமர்ப்பிப்பார். ‘மனித இனத்தில் இருந்துதான் உயர் ரக இனமான ஜீனிஸ் தோன்றியுள்ளது. இதே மனித இனத்தில் இருந்து, மற்றொரு கிளை இனம் பிரிந்து, ஜீனிஸை விட புத்திசாலித்தனம், வலிமை அதிகமான இனம், பரிணாம வளர்ச்சியால் உருவாக வாய்ப்புள்ளது. எனவே ஜீனிஸ் நன்மைக்காக, மனித இனத்தை பூண்டோடு அழிப்பது நல்லது’ என்று அர்த்தம் தொனிக்கும் வகையில், அந்த ஆராய்ச்சி இருக்கும். அதற்காக, அந்த புண்ணியவதிக்கு நம்மூர் நோபெல் பரிசு போன்றதொரு உயரிய விருதான ‘ஜெனிபெல்’ விருது கிடைக்கும்.

அதோடு, அது நின்று விட்டால் பரவாயில்லை. அதே ஆண்டு நவம்பர் கடைசியில், உலக நாட்டு தலைவிகள் அனைவரும், பாரீஸில் ஒன்று கூடி, ஒரு ரகசிய முடிவு எடுப்பார்கள். ‘மனித இனத்தை முழுமையாக வேட்டையாடிக் கொல்ல வேண்டும்’ என்பதே அது. அந்த முடிவு பகிரங்கமாக அறிவிக்கப்படாமல், மேல மட்டத்தில் மட்டும் தெரிவிக்கப்பட்டு ராணுவம், போலீஸ் உதவியுடன் மனித வேட்டை முழுவீச்சில் நடை பெறப் போகிறது. 3998ம் வருட ஆரம்பத்தில், உலகம் முழுவதும் எண்பது கோடி இருந்த மனித இனம், இரண்டே வருடத்தில், வெறும் ஆயிரக் கணக்கில் குறுகிவிடப் போகிறது!

ஆம்... 4000ம் வருடத்தில், இந்தியாவில் வெறும் 500 மனிதர்கள் மட்டுமே இருப்பார்கள். அவர்களும் மலைக் குகைகளிலும், காடுகளிலும் புதர்களிலும், பதுங்கி ஒளிந்து வாழ்வார்கள். Y4K நிலை இவ்வாறுதான் இருக்கப் போகிறது”, என்று கூறி நிறுத்தினேன்.

“அப்படியென்றால் இங்கிருந்து டைம் மிஷினில் சென்றவர்கள் எல்லாம்....”, என்று நடுங்கிய குரலில் இழுத்தாள்.

“கொல்லப்பட்டிருப்பார்கள். சந்தேகமில்லை.”

அவள் மௌனமாகி விட்டாள். நானும் அமைதியாக இருந்தேன். ரேகா, டி.சி. மிஷின் அருகில் சென்று , அதில் இருந்து வந்த பிரிண்டிங் செய்திகளை ஒன்று விடாமல் வாசித்துப் பார்த்தாள். அவள் முகம் வெளிறிப் போய் இருந்தது. நீண்ட நேர நிசப்தத்திற்கு பின்பு என்னிடம் கேட்டாள்.

“ஜீனிஸ் ஏன் குள்ளமாக உள்ளனர்?”

“அதற்கும் மூளைதான் காரணம். மூளையின் எடை அதிகமாக அதிகமாக, உயரம் குறிப்பிட்ட அளவில் நின்று விட்டது. ஜீனிஸுக்களின் சராசரி உயரம் நான்கடிதான். புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கும் மூளை, உடல் அளவு விகிதத்தை, அவர்களின் குள்ளத்தன்மை மேலும் அதிகரித்து விடுகிறது.”

“அவர்களின் டெக்னிக்கல் முன்னேற்றங்கள்?”

“பல விதத்தில் முன்னேறி விடுவார்கள். பக்கத்து நட்சத்திர மண்டலமான ஆண்ட்ருமீடாவிற்கு ராக்கெட் அனுப்புவார்கள். வினாடிக்கு 1,00,000 கி.மீ. செல்லக் கூடிய ஊர்திகள் கண்டுபிடிக்கப்படும். உணவுகள், மாத்திரைகளாய் தான் சாப்பிடுவார்கள். நாக்கு ருசிக்கென்று, உடலை பாதிக்காத உணவுகள் தனியாக கண்டுபிடிப்பார்கள். லேசர் துப்பாக்கிகள், பயோமீட்டர்கள், பயோ சென்சார்கள் என்று பல உபகரணங்களை கண்டுபிடிப்பார்கள். ஒரு நாட்டிற்குள், அந்நியர்கள் யார் நுழைந்தாலும், அந்நாட்டு தலைவிக்கு நேனோ செகண்ட் நேரத்தில் தெரிந்து, அடுத்த நேனோ செகண்டில் தாக்கப்படுவார்கள். சுருக்கமாய் கூறினால், நம்மை விட ஆயிரம் மடங்கு முன்னேறி இருப்பார்கள்.”

ரேகா, அவளுடைய நகத்தை கடித்துக் கொண்டிருந்தாள். அப்படியென்றால், அவள் தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தாள் என்று அர்த்தம். பிறகு என்னிடம் கேட்டாள்.

“இனி, Y4K விஷயத்தில் என்ன செய்யலாம், சதீஷ்?”

“நாம் கண்டுபிடித்ததை, ஒரு பேப்பராக அரசாங்கத்திடம் சமர்ப்பிப்போம்.”

“நோ, சதீஷ், நோ... அதற்கு முன்பு, அவர்களின் மனித வேட்டையை நிறுத்த, நாம் முயற்சி எடுக்க வேண்டும்.”

“நம்மால் என்ன செய்ய முடியும், ரேகா. ஜீனிஸ் நம்மை விட ஆயுத வலிமை, புத்தி வலிமை அதிகம் உடையவர்கள். அவர்களை எப்படித் தடுக்க முடியும்?”, என்று கேட்டேன்.

“அதற்கு ஒரு வழி உள்ளது”, என்று ரேகா கூறினாள்.

தொடரும்...

Sunday, September 01, 2013

Y4K

3. கண்டுபிடித்தேன்

”உன்னோட செய்திகளைப் பார்த்தால், பிராடு வேலையாக தெரிகிறதே”, என்று அவள் கூறிக் கொண்டிருந்த போதே ஸ்கிரீனில் தெரிந்த முதல் செய்தியை கிளிக்கினேன்.

நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த மகளிர் மசோதா, எதிர் வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் ராஜா ஜகன்னாதன் அறிவித்துள்ளார். அனைத்து கட்சி கூட்டம் முடிந்து வெளிவந்ததும் இந்த தகவலை அவர் நிருபர்களிடம் கூறினார்.

”இந்த செய்தியே உன் ஆணாதிக்கத்தை காட்டுகிறது, சதீஷ். உன்னுடைய மிஷினே போலி. நீயே உருவாக்கியுள்ள கற்பனை செய்திகளைத் தான் அது காட்டுகிறது.”, என்று ரேகா கோபமாக கூறினாள்.

“ஏன் அப்படி கூறுகிறாய்?”.

“மகளிர் மசோதா, நிச்சயம் அடுத்த மாதத்தில் பாஸாகி விடும். மேலும் பெட்ரோல் விலை, இப்போது லிட்டருக்கு ரூ.370/- தான் உள்ளது. இன்னும் 100 வருடத்தில் அது 150 மடங்கு அதிகரிக்கும் என்பதையும் என்னால் நம்ப முடியவில்லை”.

எனக்கும் குழப்பமாகவே இருந்தது, மற்ற செய்திகளையும் மேலோட்டமாய் பார்த்தேன். எல்லாமே இப்போது பேப்பரில் வரும் செய்திகளைப் போலவே இருந்தன. நாலாவது செய்தியை கிளிக்கினேன்.

குன்னூரை சேர்ந்த எழில் என்ற 35 வயது பெண்மணிக்கு இரண்டு இதயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருடைய உறவுக்கார டாக்டர் பெண் தற்செயலாய் இதை கண்டுபிடித்தார். எழிலுக்கு இதுவரை உடல் நலக் குறைவு ஏற்பட்டதே இல்லை. அவர் ஆஸ்பத்திரிக்கே சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் மருத்துவ உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சுற்று வட்டார கிராமங்களிலிருந்து பல பேர் குன்னூருக்கு வந்து, இவரைப் பார்த்து, சென்று கொண்டிருக்கின்றனர்...

“இதுவும் வழக்கமான இரண்டு தலை ஆடு, ஆறு விரல் மனிதன் போன்ற அப்நார்மல் கேஸ் செய்தி. அடுத்த செய்தியைப் பார்ப்போம்”.

பிரபல கிரிக்கெட் வீரர் ரஞ்சன் ரண்டேக்கர், அடுத்த உலக கோப்பை போட்டிகள் வரை விளையாட தனக்கு உடல் தகுதியும், திறமையும் உள்ளதாக பேட்டி அளித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 89 சதங்கள், T-20 போட்டிகளில் 68 சதங்களையும் குவித்துள்ள ரண்டேக்கர், 100-100 சதங்கள் அடிப்பதே தன்னுடைய லட்சியம் என்று கூறியுள்ளார். சமீபத்தில் அறிமுகமாகியுள்ள 50 பந்து போட்டிகளால் கிரிக்கெட்டுக்கு பயனே இல்லை என்று காட்டமாக விமர்சித்து உள்ளார். சமீபத்தில் தான், இவர் 20,000 கோடி விளம்பர காண்ட்ராக்டில் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“போடா..உன்னுடைய டி.சி. ஒரு கப்சா பொட்டி உன் சொந்த கற்பனைகள் தான் செய்தியாக வருகிறது. இதை நான் நம்ப போவதில்லை”, என்று கூறி வேகமாய் எழுந்தாள்.

“ஏய், ரேகா. இது நிச்சயமாய் 2150 ம் வருட செய்திகள் தான். டி.சி. சர்க்கியூட் விபரங்களை உனக்கு விவரிக்கிறேன். அப்போது தான் நீ நம்புவாய்”.

“உன் வெட்டிப் பேச்சு எதையும் நான் கேட்க விரும்பவில்லை. யோசிப்பதற்கு உனக்கு ஒரு வாரம் டைம் தருகிறேன். நெக்ஸ்ட் வீக், வெட்னஸ்டே, நான் Y4K போகப் போவது உறுதி. நீ என்னை லவ் பண்ணுவது நிஜம் என்றால், என்னுடன் கண்டிப்பாக வருவாய். ஓகே?”, என்று படபடவென்று கூறிவிட்டு, எனக்கு பதில் கூறக் கூட வாய்ப்பு கொடுக்காமல் எழுந்து சென்று விட்டாள்.

அன்று முழுவதும் எனக்கு வேறு வேலையே ஓடவில்லை. பயங்கர பயங்கர எண்ணங்கள் என்னை பயமுறுத்தின. கால்கள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. இது விஷயமாய் மீண்டும் அவளிடம் பேச்சை ஆரம்பித்தால், கோபப்படுவாள். நாளை வரை ஒத்திப் போடுவோம். ஆபீஸுக்கு போய் அவளை கன்வின்ஸ் பண்ண வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அடுத்தநாள் ஆபீஸுக்கு போனவுடன் ரேகாவின் கேபினுக்குத்தான் சென்றேன். ரேகா அங்கு இல்லை. விசாரித்ததில், நேற்றே அவள் லீவு சொல்லி விட்டாளாம். அவள் செல்லுக்கு போன் போட்டேன். தொடர்பு எல்லைக்குள் இல்லை என்று பதில் வந்தது. வீட்டு போனில் கூப்பிட்டால், வாய்ஸ் ரெக்கார்டர் பதில் சொன்னது.

எங்கே போயிருப்பாள்? நான் Y4Kக்கு வரமாட்டேன் என்று நினைத்து, அவள் காலேஜ்மேட் கிருஷ்ணனை துணைக்கு அழைக்க பெங்களூர் சென்றிருப்பாளோ? அந்த எண்ணமே எனக்குள் பொறாமையை ஏற்படுத்தியது. வீட்டிற்கு வந்து டி.சி.யில் கவனம் செலுத்த முயற்சித்தேன். தலை வலித்தது. மூளை சூடானது. என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. தூக்கமும் வரவில்லை. இரவு 2 மணிக்கு மேல்தான் தூங்கினேன்.

மறுநாள் காலை எட்டு மணிக்கு காலிங்பெல் ஓசை என்னை எழுப்பியது. கதவைத் திறந்தேன். ரேகா நின்று கொண்டிருந்தாள்.

“ஹேய், ரேகா, நேற்று முழுவதும் எங்கே போயிருந்தாய்?”, என்று கேட்டேன்.

“நம்புகிறேன், சதீஷ் நம்புகிறேன்.”

“என்ன சொல்ற?”

“நேற்று என்னுடைய டைம் மிஷினில் 05-08-2150க்கு சென்று, இரண்டு இதயம் உள்ள குன்னூர் எழிலைப் பார்த்தேன். உன் செய்திகள் அனைத்தும் சரிதான். டி.சி. வேலை செய்கிறது, சதீஷ். இதோ அடுத்த நாள் பேப்பரையும் வாங்கி வந்துள்ளேன்”, என்று கூறி, 2150ம் வருடம், ஆகஸ்ட் 6ம் தேதி பேப்பரை என்னிடம் நீட்டினாள். நானும் அதை வாசித்துப் பார்த்தேன்.

“ஒரு வார்த்தை கூட மாறாமல், அதே செய்திகள், அப்படியே வந்துள்ளது பார்”, என்று உற்சாகமாய் கூறினாள். அவளின் உற்சாகம் எனக்கும் தொற்றிக் கொண்டது. எனக்கு காலை உணவை ரெடி பண்ணிக் கொடுத்தாள்.. இரண்டு பேரும் சாப்பிட்டு முடித்த பிறகு, என்னிடம் கூறினாள்,

“ஸீ... சதீஷ். டி.சி.யை Y4K வரை எக்ஸ்டெண்ட் பண்ணி விடு. உன்னால் கண்டிப்பாக முடியும்.”

“ஆனால்...அதில் சில டெக்னிக்கல் பிரச்சனைகள் உள்ளனவே”

“அப்படி என்ன பிரச்சனை? சொல்லு. என்னால் ஹெல்ப் பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்.”

“முதலில், ஃபார்மட்-வடிவமைப்பு. ஏஜன்சிக்கள் மூலம் செய்திகள் பேப்பருக்கு செல்வதும், அச்சு பிரிண்டிங் முறையும் மறைந்து விட்டது என்று நினைக்கிறேன். இ-பேப்பர் முறை வந்திருக்கலாம்.”

“அதாவது, ஒரே டி.வீ.யில் பல சேனல்கள் வருவது போல, செய்தி பேப்பர் வடிவ மின் ஸ்கிரீனில், பல பேப்பர்களின் செய்திகள் வருவதுதான் இ-பேப்பர். சரியா? ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பொது செய்தி ஏஜன்சி இருக்கும். அதன் மூலமாய், எல்லா செய்தி நிறுவனங்களும், இ-பேப்பருக்கு செய்தி அனுப்பும். இதன் மூலம் ஒரே பேப்பரில், எல்லா நிறுவன செய்திகளும் கிடைத்து விடும். சரியா?”

“எக்ஸாக்ட்லி. அதற்கு தக்கபடி என் ஸெண்டிங் யூனிட்டை மாற்றி வடிவமைக்க வேண்டும். அது கூட அவ்வளவு சிக்கலில்லை. மற்றொரு பிரச்சனை-அலைவரிசை. ரேடியோ அலைக்கதிர்களில் எனக்கு ரிப்ளை கிடைக்க மாட்டேன்கிறது. அவர்களின் கேரியர், வேறு அலைவரிசைக்கு மாறியுள்ளது. அதை, தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் தலைவலி பிடித்த வேலை”

சிறிது நேர யோசனைக்குப் பின் ரேகா கேட்டாள்.

“நீ ஏன் IRல் டிரை பண்ணக் கூடாது?”

“என்ன திடீர்னு IR?"

”ஏதோ தோனுகிறது. அவர்கள் IR கதிர்களுக்கு மாறியிருப்பார்களோ என்று. டிரை பண்ணிப் பார் சதீஷ். நீ ஒரு கம்யூனிகேஷன் எக்ஸ்பர்ட்!” என்றாள்.

“முந்தா நாள்தான் என்னை கம்யூனிகேஷன் திருடன் என்று திட்டியதாக ஞாபகம்!”

“அதை மறந்து விடு. டி.சி.யில் மட்டும் கவனம் செலுத்து. நிச்சயம் IR கதிர்கள்தான். இரைச்சலின்மை. நீண்ட தூரம் போன்றவை அதில்தான் கிடைக்கும். நிச்சயம் சக்ஸஸ் ஆகும். ஆல் தி பெஸ்ட்”, என்று சொல்லிவிட்டு, அருகில் வந்து, என் கன்னத்தில் முத்தமிட்டாள்.

நான் ஷாக்காகி நிற்க, என்னிடம் கேட்டாள்,

“ஏய், ஏன் இப்படி இருக்கிற?”

“திடீர்னு கிடைத்த இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டேன்!”

“நீ மட்டும் Y4K தகவலை கொண்டு வந்து விடு. இதை விட இன்ப அதிர்ச்சிகள் எல்லாம் கிடைக்கும்!”, என்று கூறி கண்ணடித்து விட்டுச் சென்றாள்.

ஒரு மனிதனை உற்சாகப்படுத்த இதைவிட வேறென்ன வேண்டும். ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று இதனால்தான் சொல்கிறார்களோ?

ஆபீஸுக்கு ஒரு வாரம் லீவு போட்டேன். பகல் இரவு தெரியாமல், அறைக்குள்ளேயே முடங்கி கிடந்து டி.சி. ஹார்ட்வேரை மாற்றினேன். இ-பேப்பருக்கு தக்கபடி சர்க்கியூட்டுகளை வடிவமைத்தேன். இதற்கே இரண்டு நாட்கள் சென்று விட்டன. அலைவரிசையை கண்டுபிடிக்க, மாதக் கணக்கில் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இருந்தாலும் ரேகா கூறியபடி முதலில் IRல் முயற்சி பண்ணுவது என்று முடிவு செய்தேன். IR பிரிக்குவன்சி ரேஞ்ச் 10 டெரா ஹெர்ட்ஸிலிருந்து 400 டெரா ஹெர்ட்ஸ் வரை உள்ளது. இதனை 10 பெரிய ரேஞ்சாகவும், ஒவ்வொன்றையும் 100 உப ரேஞ்ச்களாகவும், ஆக மொத்தம் 1000 சிறு சிறு ரேஞ்ச்களாக பிரித்தேன். ஒவ்வொரு ரேஞ்சிலும் தேட ஆரம்பித்தேன். மேலும் 4 நாட்கள் சென்று விட்டன. இதுவரை இரண்டு பெரிய ரேஞ்ச்கள் மட்டுமே முடிந்துள்ளன. அடுத்த நாள், மூன்றாவது ரேஞ்சில், 128.4 டெரா ஹெர்ட்ஸில், டி.சி. கதிர்கள் திரும்பி வந்தன!

வாவ்! டி.சி. வேலை செய்கிறது! கதிர்கள் 100 வருடத்திற்கு பிறகு உள்ள செய்தி கேந்திரத்தை சென்றடைகின்றது. ரேகா வாழ்க! அவளின் IR ஐடியா வாழ்க!

உடனே, ஸெண்டிங் யூனிட்டில், Y4K தகவலைத் தேடி, கதிர்களை அனுப்பினேன். கிடைத்த ரிப்ளை எனக்கு புரிபடவே இல்லை. படிப்படியாக சென்றால்தான் புரியுமோ என்று நினைத்தேன். எனவே, 2700ம் வருடத் தகவல்களை எடுத்தேன்.

வழக்கம் போல, அதே கொலை, கொள்ளை, அரசியல், மோசடி, சவடால் செய்திகள்தான் இருந்தன. ஆனால், அதிலும் ஒரிரு செய்திகள் எனக்கு வித்தியாசமாகப்பட்டன.  இதுதான் பிரச்சனையின் ஆரம்பக்கட்டமாக இருக்குமோ? மேலும் இருநூறு வருடம் கழித்து 2900ம் வருடத் தகவலை எடுத்தேன். என் சந்தேகம் அதிகரித்தது. 3000 வருடத் தகவல்களில் அது உறுதியானது. நெஞ்சம் படபடத்தது. கைகள் நடுங்கின. 3500க்கு சென்றேன். 3800, 3900, 3960, 3990, கடைசியாக 3997ம் வருட நவம்பரில் உள்ள செய்திகள் என்னை திகைப்புக்கு உள்ளாக்கியது. காரணம் என்னவென்று எனக்கு விளங்கி விட்டது. பயத்தில் உறைந்து போனேன். சிறிது நேரத்திற்கு பின்பு, சுதாரித்துக் கொண்டு ரேகாவுக்கு போன் போட்டேன்.

“ரேகா, Y4K பிரச்சனை என்னவென்று கண்டுபிடித்து விட்டேன். நீயோ நானோ எதிர்பார்க்காத விஷயம். ரொம்ப சீரியஸ். உடனே வா”, என்றேன்.

Y4K பிரச்சனை அடுத்த அத்தியாயத்தில்...

Saturday, August 31, 2013

Y4K

2. டி.சி

எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இவள் சுயநினைவோடுதான் பேசுகிறாளா?

“வாட் டூ யூ மீன்?”, என்று கேட்டேன்.

“ஐ மீன் வாட் ஐ ஸே”

“இதென்ன பைத்தியக்காரத்தனமான யோசனையாக இருக்குது.”

“ஸீ.. நான் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் புராஜக்டே Y4Kதான். இதில் மட்டும் எனக்கு வெற்றி கிட்டிவிட்டால், ஒரே நாளில் உலகப் புகழ் பெற்று விடுவேன்.”

“ஆனால், Y4Kக்கு சென்றவர்கள் யாருமே திரும்பி வந்தது கிடையாது ரேகா”

”எனக்குத் தெரியும். இதில் ஏகப்பட்ட ரிஸ்க் உள்ளது. அதுவும் தெரியும். துணிச்சலான முயற்சி மேற்கொள்ளாமல், எந்த ஒரு ஆராய்ச்சியுமே வெற்றி அடையாது.”

“இது சாதாரண துணிச்சல் இல்லை. அசட்டுத் துணிச்சல். எத்தகைய உலகமாய் Y4K இருக்கிறது என்பதே தெரியாமல், அங்கு போவது சுத்த பைத்தியக்காரத்தனம்.”

“எத்தகைய உலகமாய் அது இருக்கும் என்று நீ நினைக்கிறாய்?”

“ஓசோன் ஓட்டை பெரியதாகி, மனிதர்கள் வாழ லாயக்கற்றதாய், பூமி ஆகியிருக்கலாம். ஏதாவது ஒரு பெரிய விண்கல் மோதி, பூமி சுக்கு நூறாக நொறுங்கிப் போயிருக்கலாம். உலகப் போர் நிகழ்ந்து, அணுக் கதிர் வீச்சு, பூமியை நிறைத்து இருக்கலாம். அல்லது சூரிய மண்டலமே ஒரு பிளாக் ஹோலாக மாறியிருக்கலாம்.”

“பரவாயில்லை. நன்றாக யோசிக்கிறாய், என்றாலும் போர்-அணுக்கதிர் வாய்ப்பைத் தவிர, மற்ற வாய்ப்புக்களுக்கு சாத்தியமே இல்லை. அந்த பிரச்சனைகள் இவ்வளவு விரைவில் வராது. கதிர்வீச்சை தடுக்க, அதற்குரிய உடையை நாம் அணிந்து செல்வோம்!”

“நோ...” என்று அலறிய நான், “விஷயம் என்ன என்று தெரியாமல் நான் அங்கு வரப் போவதில்லை”

“வரப் போவதில்லையா?” என்று கோபத்தோடு கேட்டாள்

“இல்லை. அது மட்டுமல்ல. உன்னையும் போக விடாமல் தடுப்பேன்.”

அவளுடைய கோபம் மேலும் அதிகரித்தது. சேரில் இருந்து வேகமாய் எழுந்தாள். படபடவென்று சரவெடியாய் வெடித்தாள்.

“ச்சே.. உன்ன மாதிரி ஐ.டி. பசங்க எல்லாருமே தொடை நடுங்கிகள். ஏ.சி. ரூமில் கம்ப்யூட்டரை தட்டிக் கொண்டு காலம் கழித்தால் போதும்னு நினைக்கிறீங்க. நாட்டு நலனுக்காக கூட ரிஸ்க் எடுக்க மாட்டீர்கள். கவர்ட்ஸ்!”

அவளை இப்போது இடையூறு செய்தால், பொரித்து விடுவாள். ஆகையால் நான் அமைதியாக இருந்தேன். ஆனால், அவளோ முடிக்கவில்லை.

“ஆபீஸ், டின்னர், டிரிங்க்ஸ் பார்ட்டி. இது மட்டும்தான் வாழ்க்கையா? ஆண் இனமே வேஸ்ட்! எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். 33% மகளிர் மசோதா பார்லிமெண்டில் தாக்கலாகப் போகிறது. பவர் எங்க கைக்கு வரப் போகிறது. அதற்கு அப்புறம்தான் நாடு உருப்படப் போகிறது.”

இதற்கு என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

“ஏய்... ஏன் சிரிக்கிறே? என்னோட கோபம் உனக்கு கிண்டலாக உள்ளதா?”, என்று என்னிடம் கேட்டாள்.

”அதில்லை ரேகா, புலிவருது புலிவருது கதையா, மகளிர் மசோதா வரப் போகுது, வரப் போகுதுன்னு, 1990ம் வருடத்தில் இருந்து சொல்கிறார்கள். 70 வருடம் ஆகியும் இன்னமும் மசோதா வந்தபாடில்லை!”

“இம்முறை நிச்சயம் பாசாகிவிடும். அடுத்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்து விடுவார்கள்”, என்றாள்.

“ஸீ ரேகா, முதல்ல கோபத்தை குறை. நான் சொல்கிறதை நன்றாக கவனி. உன்னோட தேவை என்ன? Y4K மர்மத்தை கண்டுபிடிப்பதுதானே? அங்கே சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரிய வேண்டும், அதுதானே?”

“ஆம்.”

“வெல், அதற்கு நாம் Y4Kக்கு போக வேண்டிய அவசியமே இல்லை. என்னோட டி.சி.யால் முடியும்.”

“டி.சி.?”

“என்னோட காலேஜ் புராஜக்ட்!”

“அதுதான் ஒர்க் ஆகவில்லையே”

“அது முன்பு. இப்போது பாதி வேலை செய்கிறது”

அவளுடைய கோபம் குறைந்தது. முகத்தில் ஆர்வம் பிறந்தது. மீண்டும் சேரில் அமர்ந்தாள். டி.சி. பற்றி விபரமாய் என்னிடம் கேட்டாள். நான் கூற அரம்பித்தேன்.

“ஸீ... தொலை தூரத்தில் உள்ள கம்ப்யூட்டரில் இருந்தோ அல்லது ஒரு தகவல் சாதனத்தில் இருந்தோ, தகவல்களை பெற வேண்டுமென்றால், ஒரு இண்டர்நெட் கனெக்‌ஷனோ அல்லது வேறு ஒரு வயர் கனெக்‌ஷனோ தேவை, இல்லையா?”

“ஆமாம்”

“ஆனால், ராணுவங்களில் உள்ள உளவுத் துறைகளில் எதிரி நாட்டுத் தகவல்களைப் பெற, அவர்கள் அனுப்பும் இடத்திலோ அல்லது பெறும் இடத்திலோ உள்ள அலைவரிசையை, தங்களின் ரீசிவிங் யூனிட்டில் ட்யூன் செய்து, வயர் கனெக்‌ஷனே இல்லாமல் தகவல்களை எடுக்கிறார்கள்.”

“அதுவும் தெரிந்த விஷயம்தானே!”

“ஆனால், இப்படி எடுக்கப்படும் தகவல்கள், குறிப்பிட்ட கோடிங் முறையில் இருக்கும். அந்த பாஸ்வேர்டை உடைத்து டிகோட் பண்ணினால் தான், ஒரிஜினல் தகவல்களை அறிய முடியும்.”

“.......”

“என்னுடைய டி.சி. செய்தித் தாள்கள், செய்தி ஏஜென்சிகள் இவைகளை மட்டும் குறி வைத்து செயல்படுகிறது. நான் செய்தி ஏஜென்சிகளின் அலைவரிசையை டியூன் செய்து, அவர்களின் தகவல்களை எடுத்துக் கொள்கிறேன். ஒரே ஒரு வித்தியாசத்தோடு. அவர்கள் எத்தகைய பாஸ்வேர்டு, கோடிங் உபயோகித்து இருந்தாலும், அதை டிகோட் பண்ண வேண்டிய அவசியம் எனக்கில்லை.”

“ஏன்?”

“ஏனென்றால், செய்தி எஜென்சிக்கள், தங்களின் தகவல்களை ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பில் மட்டுமேதான் தகவல் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. தகவல்கள் தவறு இல்லாமல் செல்ல வேண்டும் என்பதற்காக அல்ட்ரா ஹை பிரீக்குவன்சியை உபயோகிக்கின்றனர். தகவல்களின் வடிவமைப்பை வைத்தும், அது கம்பைலரில் சேகரிக்கப்பட்டிருக்கும் விதத்தை பொறுத்தும் 0,1 என்ற பைனரி தகவல்களாக - அதாவது ரா தகவல்களாக மட்டுமே நான் எடுக்கிறேன். டி.சி.யில் உள்ள கம்பைலர் அதை சரியான தகவல்களாக மாற்றி விடும்.”

“சுத்தமாக புரியவில்லை.”

“என்னோடு வீட்டுக்கு வா” என்று கூறி, ஆபீஸுக்கு லீவு சொல்லிவிட்டு, வீட்டிற்கு சென்றோம். என்னுடைய டேபிளில் பெட்டி பெட்டியாக இருந்த டி.சி. மிஷினை அவளுக்கு காண்பித்தேன்.

“இதுதான் செண்டிங் யூனிட், செய்தி ஏஜென்சிக்களின் அலைவரிசை, மற்றும் தகவல் வடிவமைப்பு இரண்டையும் சேர்த்து வைத்து, அதைத் தேடி, டி.சி. கதிர்கள், இந்த ஆண்டெனா மூலம் புறப்படும். இரண்டும் மேட்ச் ஆகும் சாதனத்தில் உள்ள கம்பைலர் டிஜிட்டல் தகவல்களை, மீண்டும் அது இங்கே கொண்டு வரும்.”

”ரீசிவிங் யூனிட் அதை பெற்றுக் கொண்டு ஒரிஜினல் தகவலை வடிகட்டி, ஸ்கிரீனுக்கு அனுப்பி விடும். புரிகிறதா?”

”ஓரளவிற்கு புரிகிறது.”

“ஒரு உதாரணத்தோடு கூறுகிறேன். சென்ற வாரம் டி.சி.யை, உன்னுடைய பெர்சனல் லேப்டாப் வடிவமைப்பு, மற்றும் அலைவரிசைக்கு டியூன் பண்ணி, அதில் உள்ள தகவலை உனக்குத் தெரியாமல் எடுத்தேன். டைரி என்ற ஃபோல்டருக்கு உள்ளே நீ எழுதியிருந்ததை வாசிக்கிறேன். கேள்!”

“சதீஷ் டார்லிங், உன் முன்னால் நிற்கும் போது மட்டுமல்ல, உன்னை விட்டு பிரிந்து வந்தாலும், அந்த காந்தக் கண்கள் என்னைத் தொடர்ந்து வருவதன் மர்மம் என்ன!?
............
நாம் உறவாக இணைவது
ஒருபுறம் இருக்கட்டும்.
நம் உதடுகள் இணைவது
இப்போது இருக்கட்டுமே!?
....
என் கண்ணில் தெரியவில்லையா காதல்
என் சொல்லை எதிர்பார்க்கிறாயே கள்ளா!
....”

“ஸ்டாப்....ஸ்டாப்” என்று ரேகா கத்தினாள்.

“இதெல்லாம் நீ எழுதியதுதானே?”

அவள் மௌனம் சாதித்தாள்.

“இப்ப புரியுதா? நான் ஒரு கம்யூனிகேஷன் எக்ஸ்பர்ட்ன்னு!”

“மண்ணாங்கட்டி! நீ ஒரு கம்யூனிகேஷன் திருடன்! கிரிமினல்! அடுத்தவர்களின் ரகசியங்களை எட்டிப் பார்க்கும் ரவுடி!”

“ஓகே. ஓகே. நம் லவ் மேட்டரை அப்புறம் பார்ப்போம். முதலில் டி.சி.யை கவனி. இதோட வேலை இத்துடன் முடியவில்லை.”

”டி.சி.ன்னா டெலி கம்யூனிகேஷனா?” என்று கேட்டாள்.

“இல்லை. டைம் கம்யூனிகேஷன்!”

“டைம் கம்யூனிகேஷன்?”

”யெஸ்... இப்ப டைம் மிஷின் எப்படி வேலை செய்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்.”

அவள் டைம் மிஷின் வேலை செய்யும் விதத்தை எனக்கு விவரிக்க ஆரம்பித்தாள்.

“முன்னால்-பின்னால், இடது-வலது, மேலே-கீழே என்ற X-Y-Z மூன்று பரிமாணங்களில் இருந்து விலகி, இறந்த காலம்-எதிர்காலம் என்ற நான்காவது பரிமாணமான காலப் பரிமாணத்தில் ஒரு ஊர்தி பயணம் செய்கிறது. இதை செய்ய இன்று பலவித சாப்ட்வேர்கள் உள்ளன”

“குட். அதாவது, நான்காவது பரிமாணத்தில் ஒரு மிஷின் அல்லது ஒரு ஊர்தி பயணம் செய்யலாம். இல்லையா?

“ஆமாம்”

“கால பரிமாணத்தில் ஒரு திடப் பொருளான ஊர்தியே பயணிக்கும் போது, டி.சி. அலைக் கதிர்களும் பயணம் செய்யும் இல்லையா?”

சட்டென்று அவள் முகம் பிரகாசமானது. அவளுக்கு டி.சி. வேலை செய்யும் வித்தை புரிந்து விட்டது.

“அப்படியென்றால், டி.சி. மூலம் எதிர்காலத் தகவல்களை பெற முடியுமா?”

“அதுதானே என்னுடைய ஆராய்ச்சி. அதில் பாதி வெற்றியும் கிடைத்து விட்டது.”

“அதென்ன பாதி?”

என்னால், இப்போது நூறு வருடத்திற்கு உட்பட்ட தகவல்களை மட்டுமே பெற முடிகிறது. 2170க்கு பிறகு, செய்தி கேந்திரங்களின் வடிவமைப்பு, அலைவரிசை எல்லாமே மாறிவிட்டது. நியூஸ் பேப்பர் வழக்கொழிந்து விட்டது. அதனால் சில டெக்னிக்கல் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. அதை சரி செய்து விட்டால், Y4K தகவல்களை கூட என்னால் பெற முடியும்.”

“கிரேட்... சதீஷ்....கிரேட். எங்கே, 2150ம் வருட செய்திகள் ஏதாவது காட்டு.”

நான் டி.சி.யை ஆன் செய்தேன். தேதிக்கு 05.08.2150 என்று டைப் செய்தேன். நியூஸ் போர்ட்டலில் பாரத் கிரானிக்கள் என்றேன். அலைவரிசை, அலைநீளங்களை கூறினேன். மேலும், சிறு சிறு கட்டளைகளை எண்டர் பண்ணியதும் ஆண்டெனாவில் இருந்து டி.சி. அலைக்கதிர்கள் கிளம்பின. ஐந்து வினாடிகளில் ரிசீவரில் தகவல்கள் வந்து சேர, நான் ஸ்கிரீனைப் பார்த்தேன். அதில் தெரிந்த தலைப்புச் செய்திகள்,

“அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 33 சதவீத மகளிர் மசோதா தாக்கல் செய்யப்படும்! பிரதமர் அறிவிப்பு!!”

“பெட்ரோல் விலை அதிகரிப்பு. லிட்டருக்கு ரூ 54000/- ஆனது”

“நடுவானில் இரண்டு ஹெலிகார்கள் மோதல். 8 பேர் உயிரிழந்த பரிதாபம்.”

“குன்னூரில் இரண்டு இதயங்களுடன் ஒரு அதிசய பெண்மணி”

“அடுத்த உலகக் கோப்பை வரை விளையாடுவேன். ரஞ்சன் ரண்டேக்கர் பேட்டி.”

பயணம் தொடரும்....

Friday, August 30, 2013

Y4K

1. ரேகாவின் புரோப்போஸல்

”விதி... விதி... எல்லாம் என் தலைவிதி! பெண்களோட பேச்ச கேட்கக் கூடாதுன்னு நானே நிறைய பேருக்கு அட்வைஸ் பண்ணியிருக்கிறேன். அப்படி இருந்தும் இந்த முட்டாள் ரேகா பேச்சக் கேட்டு, இப்படி Y4K பிரச்சனையில் மாட்டிக் கொண்டேனே.. இந்த ராட்சசிங்க என்ன பண்ணப் போறாங்களோ? நல்லவேளை! இந்த ரேகாவும் என்னோட சேர்ந்து மாட்டிக்கிட்டா! ஏதோ ஒருத்தனா இருந்து கஸ்டப்படுறத விட ரெண்டு பேரா இருப்பது பெட்டர்தானே...! சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்களை நம்பாதேன்னு சும்மாவா சொல்றாங்க...!”

என்னடா இவன் திருவிளையாடல் தருமி போல புலம்புகிறானேன்னு யோசிக்கிறீர்களா? என்னோட கதையை சொல்கிறேன். அப்பத்தான் என்னோட புலம்பல் நியாயமானதுன்னு உங்களுக்குப் புரியும்.

என் பேரு சதீஷ். 2056-2060 வருடத்தில் பி.எஸ்.ஜி.யில் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் படித்து முடித்த உடனேயே கேம்பஸ் இண்டர்வியூவில், எனக்கு பிக்கோ ஸாஃப்ட் கம்பெனியின் சென்னை யூனிட்டில் வேலையும் கிடைத்தது. மூன்று வருடத்தில் சீனியர் எக்ஸிகியூட்டிவ் என்ஜினியராக புரோமோஷன்ம் ஆகி விட்டேன்.

தினமும் ஆபிஸுக்கு வந்து, வீட்டிற்கும், நண்பர்களுக்கும் போன் பேசிவிட்டு, பெர்சனல் இ-மெயில்களை செக் பண்ணி, ரிப்ளை அனுப்பிவிட்டு, சொந்த பிளாகை அப்டேட் பண்ணிவிட்டு, கிடைக்கும் கேப்பில் மட்டும் ஆபீஸ் வேலைகளை பார்க்கும் ஒரு சராசரி ஐ.டி. என்ஜினியராகவே என் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

அன்றைய தினம், 2063ம் வருடம் ஜூன் மாதம் 18, தேதி, மறக்க முடியாத தினம்; சனி என்னை பிடித்த தினம்! நான் என்னுடைய அலுவலக அறைக்குள் உட்கார்ந்து கொண்டு, பிஸியாக ஒரு மாடல் தயாரிப்பில் இருந்தேன். பக்கத்து வீட்டு எட்டாம் வகுப்பு பானு, தன் ஸ்கூல் சயின்ஸ் எக்ஸிபிஷனில், உயிரியல் பாடத்திற்கு வைப்பதற்காக, ஒரு பரிணாம வளர்ச்சி மாடல் தயாரிக்க சொல்லியிருந்தாள். ஆகவே, என்னுடைய ஆபீஸ் வேலையை ஒதுக்கி விட்டு, டேபிளில் இறைந்து கிடந்த அமீபா, மீன், தவளை, டைனசர், பறவைகள், விலங்குகள் டம்மிகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என் அறைக்குள் ரேகா நுழைந்தாள்.

ரேகா - என் கனவுக் கன்னி! காதல் தேவதை! அழகும் அறிவும் ஒரு சேர இருக்கும் அதிசய பெண்களில் ஒருத்தி! டைரியில் அவளைப் பற்றி எழுதாத நாட்களே கிடையாது. யெஸ்! நான் அவளைக் காதலிக்கிறேன்.

”கண்ணைக் காட்டாதே கண்ணே
மன்மதன் உன்னைக் காணின்
கயல்விழி வில்லாகி விடும் - அவன்
மலர் வில்லுக்குப் பதில்”
என்று அவளைப் பற்றி கவிதையெல்லாம் எழுதி உள்ளேன்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஆபீஸ் விட்டு திரும்பும்போது, பிட்சா கார்னரில் என் காதலை அவளிடம் கூறினேன். ஆனால், இன்றுவரை, அவள் அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தாள். அவளும் என்னை லவ் பண்ணுகிறாள் என்று எனக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், அதை அவள் வாய்மொழியாய் சொல்ல மாட்டேன்கிறாள். ஆண்களை அலைய வைப்பதில், பெண்களுக்கு அப்படியென்ன அலாதிப் பிரியமோ? அவளிடம் இது பற்றி கேட்டாலே, “சதீஷ், காதல், கல்யாணம், இதைப் பற்றியெல்லாம் நான் யோசிக்கவே இல்லை. ஐ வாண்டு டு அச்சீவ் சம்திங். ஏதாவது சாதிக்க வேண்டும். புகழ் பெற வேண்டும். அதற்கப்புறம்தான் மற்ற விஷயங்கள் எல்லாம்”, என்று கூறி என் வாயை அடைத்து விடுகிறாள்.

அவள் ஒரு புத்திசாலிப் பெண்தான். புதிய கண்டுபிடிப்புக்கள் செய்யக் கூடிய திறமை உடையவள்தான். சந்தேகமில்லை. ஆனால், பொதுவாகவே பெண்கள் அனைவரும் புத்திசாலிகள் என்ற தவறான கருத்தை உடையவள். தவறான என்ற வார்த்தையை அடிக்கோடு இடுங்கள். என்னைப் பொறுத்தவரை பெண்கள், எந்த செயலையும் முன்யோசனையின்றி செய்பவர்கள் என்ற கருத்தை உடையவன். ஆகவே, அவர்கள் சொல்லை நான் காது கொடுத்தே கேட்பதில்லை. ஆனால், ரேகா மட்டும் இதில் விதிவிலக்கு. அவள் வார்த்தை எனக்கு வேதவாக்கு. காதலியாயிற்றே!

ஒருநாள் அவள் என்னிடம், “நீயும் ஏதாவது சாதனை பண்ணப் பாரேன், சதீஷ்.” என்றாள். அதிலிருந்து, ரிசல்ட் கிடைக்காத என்னுடைய காலேஜ் புராஜக்டான டி.சி.யில் கவனம் செலுத்தினேன். அதில் சிறிதளவு முன்னேற்றமும் ஏற்பட்டது.

வெல், நான் காலேஜ் படித்த சமயங்களில் என் சக நண்பர்கள், தங்களின் புராஜக்டில், பல தில்லுமுல்லு வேலைகள் செய்தார்கள். இது டைம் மிஷின் யுகம் என்று உங்களுக்குத் தெரியும். கால இயந்திரத்தை எல்லாருமே சர்வ சாதாரணமாய் உபயோகிக்கும் காலம் இது. இறந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் தங்கள் இஷ்டப்படி, ஒரு கட்டுப்பாடு இல்லாமல், எல்லாரும் சென்று வந்து கொண்டிருந்தனர்.

கல்லூரி மாணவர்கள், டைம் மிஷினை தங்களுக்கு சாதகமாய் உபயோகித்தார்கள். அதன் மூலம், எதிர்காலத்திற்கு சென்று, அங்குள்ள லேட்டஸ்ட் தொழில் நுட்பங்களை அறிந்து கொண்டு, திரும்பி வந்து, அதை தங்களுடைய சொந்த புராஜக்டாக சமர்பித்தனர். இதனால் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. குளறுபடிகள் உருவாயின. இவ்வாறு செய்யக்கூடாது என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தும், அதனால் பயனில்லை. தங்களுடைய கல்லூரிக்கு புகழ் கிடைக்கிறது என்பதற்காக, கல்லூரி நிர்வாகங்களே இந்த ஏமாற்று செயலை ஊக்குவித்தன!

அந்த சமயத்தில், ஒருநாள், சென்னையைச் சேர்ந்த கல்லூரி ஒன்றின் இரு மாணவர்கள், ஆர்வ மிகுதியால் கி.பி. 4000ம் வருடத்திற்கு டைம் மிஷினில் சென்றனர். சென்றவர்கள் சென்றவர்கள்தான். இன்றுவரை அவர்கள் திரும்பி வரவே இல்லை. அந்தக் கல்லூரி நிர்வாகம், மாணவர்களைத் தேடி இரண்டு ஆசிரியர்களை, மற்றொரு டைம் மிஷினில் அனுப்ப, அவர்களும் மறைந்து போயினர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உறவினர்கள் போலீஸில் புகார் கொடுத்தவுடன்தான் விஷயம் பெரிதானது. கல்லூரிகளின் பொறுப்பற்ற போக்கை பலரும் கண்டித்தனர். அறிவியல் முன்னேற்றங்கள் அழிவுக்குத்தான் இட்டுச் செல்கிறது என்று கூக்குரலிட்டனர். தொலைந்து போன மாணவர்கள், ஆசிரியர்கள் குடும்பங்களின் கண்ணீர் பேட்டி எல்லா மீடியாக்களிலும் வந்தது.

4000ம் வருடத்தில் உள்ள மர்மம் அனைவரையும் வசீகரித்தது. அதை அறிந்து கொள்ள உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து ஒரு வாரத்திற்குள், சுமார் 3000 பேர் சென்றனர். அந்தோ, பரிதாபம்! அவர்களில் ஒருவர் கூட திரும்பி வரவில்லை! அதன்பின்புதான், 4000 வருட ஆபத்தின் தீவிரம் எல்லா நாட்டிற்கும் புரிந்தது. வருடம் 4000 - சுருக்கமாய் Y4K - உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்கால பயணத்தை பல நாடுகள் தடை செய்தன. டைம் மிஷின்களில் இருந்த எதிர்கால பயண சாப்ட்வேர்கள் அழிக்கப்பட்டன.

என்றாலும், அரசாங்கமே, ரகசியமாய் டைம் டிராவல் மூலம் Y4K மர்மத்தை அறிய முயற்சிப்பதாகவும், அவைகளும் தோல்வியிலேயே முடிவதாகவும், பலவித வதந்திகள் உலவியது.

பல கதைகள் Y4K குறித்து வந்தன. இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் Y4K பற்றிய சினிமாக்கள் வந்தன. பேப்பர்களிலும், மேகசின்களிலும் Y4K பக்கம் ஒதுக்கப்பட்டது. கோவில்களில் Y4K ஸ்பெஷல் பூஜை நடத்தப்பட்டது. மந்திரிக்கப்பட தாயத்துக்கள், காப்புகள், கற்கள் அமோகமாக விற்பனை ஆனது. SMSன் பிரதான விஷயமாக Y4K இருந்தது.

அந்த பரபரப்பான சூழலில்தான், அன்று ரேகா என் அறைக்குள் வந்தாள். மினி ஷார்ட்ஸ், ஒய்-கட் ஸ்லீவ்லெஸ் ஷர்ட் சகிதம் அமர்க்களமாய் இருந்தாள். என்னுடைய லவ் புரப்போஸலுக்கு பதில் கூறத்தான் வந்துள்ளாளோ என்று நினைத்தேன்.

“சொல்... தேவதையே... சொல். சம்மதம் என்ற அந்த ஒற்றை வார்த்தையை உன் உதடுகள் உச்சரிக்கட்டும். ஐ லவ் யூ என்ற அந்த பொன்மொழி என் காதுகளில் தேனாகப் பாயட்டும்.”

அவள் என்னை மேலும் கீழும் பார்த்தாள்.

“என்ன... இருபதாம் நூற்றாண்டு டிராமா எதற்காவது ரிகர்சல் பண்றியா? இப்படி உளர்றே”, என்றாள்.

“என் லவ் புரப்போஸலுக்குத் தான் பதில் கூற வந்திருக்கிறாயோ என்று நினைத்தேன்”

“அதை ஒரு ஓரத்தில் தூக்கி வை, சதீஷ். நான் வேற ஒரு புரப்போஸலுக்கு வந்துள்ளேன்.”

“வேற புரப்போஸல்னா, லீ மெரிடியனில் டான்ஸ் கம் டின்னர், தென் ஒரு ரூம் ரிசர்வ் பண்ணி...”, என்று நான் இழுக்கவும் ஒரு முறை முறைத்தாள்.

“புத்தி போகுது பாரு. நான் சொல்ல வந்ததே வேறு.”

“சொல்லு, சொல்லு”

ஆனால் அவள் சொல்லத் தயங்கினாள். சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை பார்த்தாள். என்னுடைய ஆர்வம் அதிகரித்தது. என்ன சொல்லப் போகிறாள்? மெதுவான குரலில் கூறினாள்.

“என் பிரண்டு கிட்ட இருந்து, செகண்ட் ஹாண்டில் ஒரு டைம் மிஷினை சமீபத்தில் நான் வாங்கினேன். அதில்... அதில் எதிர்கால பயணத்திற்கு உரிய சாப்ட்வேர் அழிக்கப்படாமல் உள்ளது.”

“அதனால் என்ன? கவர்மெண்டில் இன்பார்ம் பண்ணி அதை அழித்து விட வேண்டியது தானே?”

“நான் அதை அழிக்கப் போவதில்லை.”

“பிறகு?”

“அந்த மிஷின் மூலம்”

“மிஷின் மூலம்?”

“நானும் நீயும்....”

“நீயும் நானும்?”

“Y4Kக்கு போகப் போகிறோம்.”

பயணம் தொடரும்....

Tuesday, November 27, 2007

மர்டர் மிஸ்ட்ரி - அத்தியாயம் ஈ

நல்லவேளை. காலமித்ரா இந்தமுறை லேண்ட் ஆன இடம் ஆள் அரவமற்று அமைதியாக இருந்தது. லொக்கேஷன் ஸ்கிரீன் "கடம்பூர்" என்று மினுக்கியது. காலமித்ராவை, ஒரு புதரின் பின்னே மறைவாக பார்க் பண்ணினேன். பின்பு அதிலிருந்து இறங்கி, நான் வந்துள்ள இடத்தை சுற்றி பார்த்தேன்.

கடம்பூர் நகர், சம்பூவரையர் என்னும் சிற்றரசர்கள் ஆட்சி செய்த இடம். சோழ நாட்டிற்கு கீழே, கடம்பூர் எல்லைக்குள் மட்டும், வரி வசூலித்து, ஆட்சி நிர்வாகம் செய்ய அனுமதி உடைய சிற்றரசு. தொலைவில் அரண்மனை கோட்டைச் சுவர் நீண்டு, உயர்ந்து இருந்தது. அதற்கு உள்ளே புலிக்கொடி பறந்தது. கோட்டை மதிலுக்கு வெளியே அகலமான அகழி இருக்க, அதனுள்ளே சேறும், நீறும், முதலையும் இருந்தது.

அகழியை ஒட்டி சிறிது தூரம் நடந்தேன். அரண்மனைக்கு உள்ளே எப்படி செல்வது? முகப்பு வாயில் வழியே நுழைந்தால், காவலனின் பல கேள்விகளுக்கு பதில் கூற வேண்டியது வரும். அது ரிஸ்க். காலமித்ராவில் அட்சரேகை டிகிரி செகண்டில் சிறிது மாற்றம் ஏற்படுத்தி உள்ளே செல்லலாம். எனினும், காலமித்ராவை அரண்மனைக்கு உள்ளே பாதுகாப்பாய் மறைத்து வைப்பது எளிதல்ல. என்ன செய்யலாம்? யோசித்துக் கொண்டே நடந்தேன்.

ஒரு பாழடைந்த அய்யனார் கோவில் தென்பட்டது. அந்த இடத்தில் ஒரு கோவில் இருந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் அருகில் யாரும் வசிப்பது போலவே தெரியவில்லை. மக்கள் உபயோகிக்கும் வழிப்பாதை கூட அருகில் எதுவும் இல்லை. இத்தகைய இடத்தில், ஒரு கோயில் இருந்தால் இவ்வாறு பாழடைந்துதான் இருக்கும்.

கடவுளை நம்பினோர் கை விடப்படார். அரண்மனைக்கு உள்ளே செல்ல ஒரு மார்க்கம் வேண்டும் என்று மனதில் அய்யனாரிடம் வேண்டினேன். பின்பு அய்யனார் சிலையை இடமிருந்து வலமாய் சுற்றி வந்தேன். அப்போது, சிலையின் கையில் உள்ள வாள் எனக்கு வித்தியாசமாகப்பட்டது. அருகில் சென்று பார்த்தேன். அதன் வாள் பிடி பித்தளையில் செய்திருக்க, கைப்பிடியையும், வாளையும் இறுக்கிப் பிடிக்கும் செம்புக் குமிழ் பெரிய அளவில் வித்தியாசமாய் இருந்தது. குமிழை என் விரல்களால் பற்றினேன். அதில் சிறிது ஆட்டம் இருந்தது. ஏதோ உந்துதலில், அந்தக் குமிழை ஒரு சுழற்று சுழற்றினேன்.

ர்...ர்...ர்...

ஒரு கதவு நகரும் ஓசை கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தேன். கோவில் அருகில் உயர்ந்து வளர்ந்துள்ள ஒரு ஆலமரத்தின் அடியில், கீழ்தரை விலகிக் கொண்டிருந்தது. ஆச்சர்யம் மேலிட அதன் அருகில் சென்று பார்த்தேன். உள்ளே ஒரு படிக்கட்டு கீழ் நோக்கி இறங்கியது.

இதயம் படபடக்க, அதனுள் இறங்கினேன். பத்து படிகள் இறங்கியதும், வாளில் உள்ள குமிழ் போன்று, ஒரு செம்புக் குமிழ் சுவரில் இருந்தது. அதனை சுழற்ற, மேல் கதவு மூடிக் கொண்டது! கும்மிருட்டாய் ஆனது.

என் பென் டார்ச்சை எடுத்து ஆன் செய்தேன். பாதையோ மேலும் இறங்கிக் கொண்டே சென்றது. நானும் சத்தமே எழுப்பாமல் இறங்கினேன். ஓரிடத்தில் படிகள் நின்று போய், நேர்பாதையாக செல்ல ஆரம்பித்தது. இது நிச்சயம் அரண்மனைக்குள் செல்லும் சுரங்கப் பாதையாகத் தான் இருக்கும். அய்யனார் நமக்கு சரியானபடி வழி காட்டியுள்ளார் என்று எண்ணிக் கொண்டே நடந்தேன். பத்து நிமிடம் நடந்ததும் நேர்பாதை முடிவுக்கு வந்தது. மீண்டும் படிகள் மேல் நோக்கி ஏறியது. என் கால்களில் மெதுவான நடுக்கத்துடன் மேலே ஏறினேன். இந்த பாதை எங்கு முடிவுறும்? இதன் வாசல் எந்த அறையில் இருக்கும்? சம்புவரையர் அறையிலா? அல்லது அவரது மகள், மணிமேகலையின் அறையிலா?

ஏறிச் சென்ற படிகள் ஒரு இருட்டு அறையில் முடிந்தது. அந்த அறை பழைய உபயோகமில்லாத சாமான்களால் நிரம்பியிருந்தது. இந்த சுரங்கப் பாதை வாசல் எளிதில் தெரியாமலிருக்க ஒரு ஓவியம் மூலம் மறைத்திருந்தது. அதனை சிறிது நகர்த்தி வைத்தேன். அந்த அறையை மேலும் ஒருமுறை நன்கு பார்த்து விட்டு, பின்பு டார்ச்சை அணைத்தேன்.

அந்த அறையோடு சேர்ந்த மற்றொரு அறையில் வெளிச்சம் தெரிந்தது. அதன் வாசல் ஒரு திரையால் மூடப்பட்டு இருந்தது. நான் மெதுவாக பூனை போல நடந்து அந்த வாசலை அடைந்தேன். திரையை சிறிது விலக்கி எட்டிப்பார்த்தேன். உள்ளே, இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு இருந்தனர். தலையை உடனே உள்ளே இழுத்துக் கொண்டேன். வேறு வழியில் அந்த அறைக்கு செல்லலாமா என்று பார்த்தேன். அந்த அறைக்கு மேலும் ஒரு வாசல் இருந்தது. அதற்கும் திரை இருந்தது. அந்த வாசல் உள்ள இடத்தை, அறையில் உள்ள உடை மாற்றும் நிலைக் கண்ணாடி மூலம் மறைத்து வைத்திருந்தனர்.

நான் திரையை விலக்கி, நிலைக் கண்ணாடியின் பின்புறம் ஒளிந்து கொண்டேன். பின்பு கண்ணாடி பிரேமில் உள்ள டிசைன் இடைவெளி வழியாக அறையை கவனித்தேன்.

ஒரு மிகப்பெரிய படுக்கை அறை. விஸ்தாரமாய், அதே சமயம் அழகாகவும் இருந்தது. அறையின் நடுவே, யானை தந்தங்களினால் அலங்காரம் செய்யப்பட்ட ஒரு உயர்ரக கட்டில் இருந்தது. அதன்மீது மெத்தையும், விலையுயர்ந்த விரிப்பும் விரிக்கப் பட்டிருந்தன. சுவரில் வேட்டையாடி பதப்படுத்தப்பட்ட மிருகங்களின் தலைகள் இருந்தன. சுவர்கள், அழகிய ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிலைக் கண்ணாடி, மேஜை, நாற்காலி என பலவித பர்னீச்சர்களும் ஆடம்பரமாக இருந்தன. ஆங்காங்கே அழகிய விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

கட்டிலின் மீது அமர்ந்து கொண்டு இரு பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர். பகட்டான உடைகள், அணிகலன்களால் இருவருமே ஜொலித்துக் கொண்டிருந்தனர். ஒருத்தி பழுவேட்டையர் என்ற சிற்றரசரின் மனைவி நந்தினி. மற்றொருத்தி இந்த அரண்மனையின் செல்லப் பெண், சம்புவரையரின் மகள் மணிமேகலை. இவர்களில் யாரேனும் ஒருவர் கூட கொலைக் குற்றவாளிகளாக இருக்கலாம். ஏனென்றால், இந்த சிற்றரசர் குலத்தினர், ஆதித்த கரிகாலரிடம் வெறுப்பு காட்டியே வந்துள்ளனர்.

அப்போது வெளியே தடதடவென்று மதயானை நடந்து வருவது போல சத்தம் கேட்டது. உடனே மணிமேகலை அவசர அவசரமாய் அந்த அறையினுள் இருந்த ஒரு மறைவிடத்தில் மறைந்து கொண்டாள். கதவை திறந்து கொண்டு ஒரு வாலிபன் கம்பீரமாக நுழைந்தான்.

அட.. இது நம் ஹீரோ அதித்த கரிகாலர்! இவர் கடம்பூர் அரண்மனைக்குள் இருக்கிறார் என்றால்... இன்றுதான் சம்பவம் நடக்கப் போகிறதா?

எனக்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டது. முகம் குப்பென்று வியர்த்தது. உள்ளே நுழைந்த கரிகாலர், நந்தினியுடன் அமைதியாகவே பேசிக் கொண்டிருந்தார். எனினும் அவர் கையில் ஒரு வாள் இருந்தது. இந்த வாள்தான் அவர் உயிரை குடிக்கப் போகிறதா?

மணிமேகலையைப் பார்த்தேன். அவளோ தன் மறைவிடத்தில் இருந்து சிறிதும் வெளிக்காட்டாமல் இருந்தாள். அப்போது பின்புறம் லேசான சத்தம் கேட்க, திரையை விலக்கிப் பார்த்தேன். 'திக்'கென்று இருந்தது. சுரங்கப்பாதை வாசல் அருகே ஒருவன் நின்று கொண்டிருந்தான். ஆதித்த கரிகாலரும், நந்தினியும் பேசுவதை அவன் ஒட்டு கேட்டுக் கொண்டிருந்தான். யாரிவன்? எப்படி இங்கு வந்தான்? அவனை நன்றாக உற்றுபார்த்தேன். எனக்கு அவனை அடையாளம் தெரிந்தது. வந்தியத் தேவன். குந்தவையின் காதலன். ஆக, இவன்தான் ஆதித்த கரிகாலரை கொல்லப் போகிறானா?

நான் வந்த சுரங்கப் பாதை வழியாகத்தான் வந்தியத்தேவனும் வந்திருக்க வேண்டும். அடேய் வந்தியத்தேவா! நான் சந்தேகப்பட்டது சரியாகத்தான் உள்ளது. நீதான் கொலைகாரனா? ஆனால்... நீ யார் கையாள்? கரிகாலரின் தம்பி அருள்மொழி வர்மனுக்கா? அல்லது கரிகாலரின் சித்தப்பா உத்தமச் சோழருக்கா? இல்லை பழுவேட்டையர்களுக்கா? யாருக்காக நீ இந்த துரோகத்தை செய்யப் போகிறாய்?

இதற்கிடையே கரிகாலரின் பேச்சில் வேகம் கூட ஆரம்பித்தது. உச்சஸ்தாயில் கோபமாக பேசினார். நந்தினி ஏதோ சொல்ல முற்பட்டும், அதனை கவனிக்காமல், வெறித்தனமாய் பேசினார்.. போகப் போக நந்தினியும் கோபமடைய ஆரம்பித்தாள். இருவர் பேச்சிலும் பொறி பறந்தது.

நந்தினியா? வந்தியத்தேவனா? யாரந்த கருப்பு ஆடு? யாருடைய கை கொலை செய்யப் போகிறது? இருவரையும் மாறி மாறி கவனித்தேன்.

திடீரென்று சுரங்கப்பாதை வழியே மற்றொரு ஆஜானுபாகு உருவம் தோன்றியது. அந்த உருவம் வந்தியத்தேவன் பின்புறம் வந்து, இடது கையால், அவன் கழுத்தை சுற்றி இறுக்கியது.

இவர்... இவர்... பழுவேட்டையர் அல்லவா? பழுவூர் குலத்தின் அரசர் அல்லவா? அப்படியென்றால் பழுவேட்டையர்தான் கொலையாளியா? வந்தியத்தேவன் நல்லவன்தானா?

பழுவேட்டையர் குலத்தினர், விஜயாலயச் சோழர் காலத்தில் இருந்தே, சோழ பேரரசிடம் நெருக்கமாக இருந்தனர். விஜயாலயர், ராஜாதித்தர், அரிஞ்சயர், கண்டராதித்தர், சுந்தரச்சோழர் என அனைவர் காலத்திலும், பழுவேட்டையர்கள் உயர்ந்த பதவியில் அமர்த்தப்பட்டு, மரியாதையாக நடத்தப்பட்டனர். சோழ சிம்மாசனத்தை யார் அலங்கரித்தாலும், அவர்களுக்கு அடுத்த ஸ்தானத்தை உடையவர் பழுவூர் குலத்தினராகவே இருந்தனர்.

ஆனால், ஆதித்த கரிகாலர் இளவரசு பட்டத்தை அடைந்ததும், அவருக்கும், அப்போதைய பழுவேட்டையருக்கும் சிறுசிறு உரசல்கள், மனஸ்தாபங்கள் தோன்றின. அதனை பேசி தீர்ப்பதற்கு பதில், இருவருமே அதை மேலும் மேலும் வளர்த்தனர். பழுவேட்டையர், அளவுக்கு அதிகமாய் சோழப் பேரரசில் ஆதிக்கம் செலுத்துவதாய் கரிகாலர் எண்ணினார். நேற்று முளைத்த சிறு பையன் தன்னை மரியாதைக் குறைவாய் நடுத்துவதாக பழுவேட்டையர் எண்ணினார்.

இந்த ஆதிக்க போராட்டம் கொலை வரை இட்டுச் செல்வது ஒன்றும் அதிசயமில்லை.

வந்தியத்தேவன் தன் மீது தொடுக்கப்பட்ட திடீர் தாக்குதலால், முதலில் தடுமாறி நிலை குலைந்தான். பின்பு ஒருவாறு சமாளித்து அவர் பிடியை விலக்க போராடினான். என்ன நடக்கப் போகிறதோ? இருட்டு அறையில் நடப்பதை நன்கு கவனிக்க இரண்டு அடி முன்னே வந்ததும்தான் என் தவறை உணர்ந்தேன். உணர்ச்சிவசப்பட்டு, கண்ணாடி மறைவிலிருந்து வெளியே வர, என் மீது வெளிச்சம் பட்டது.

"ஏய்... யார் நீ?" ஆவேசத்துடன் என்னைப் பார்த்து கேட்டார் கரிகாலர்.

"நான்... நான்..." பதில் வராமல் தடுமாறினேன். பாண்டிய நாட்டு எதிரியாக இருப்பேனோ என்று நினைத்த அவர், என் மீது பாய்ந்து, தன் வலது கையால் என் கழுத்தைப் பிடித்து சுவற்றோடு அமுக்கினார். அவரின் வஜ்ர கைகளில் இருந்து என்னால் நகர முடியவில்லை. அவர் என்னை அப்படியே தூக்கினார். ஹக்... ஹக்... முச்சு திணறினேன். நெஞ்சை அடைத்தது. கண்கள் இருண்டன. எப்படியாவது தப்பிக்க வேண்டும்.. என்ன செய்வது? எப்படி தப்பிப்பது?

தற்பாதுகாப்புக்காக, என் இடுப்பில் இருந்த விஜயாலயர் கத்தியை உருவினேன். ஆதித்த கரிகாலர் இடது மார்பை நோக்கி வேகமாய் பாய்ச்சினேன். கரிகாலர் தன் பிடியை விட்டுவிட்டு, கண நேரத்தில் துடிதுடித்து என் கண் முன்னே இறந்து விழுந்தார். அதிர்ந்து போனேன் நான்.

நடந்த சம்பவங்களை கண்டு நந்தினியும் அதிர்ச்சியடைந்து இருக்க, மணிமேகலையோ நடந்ததே அறியாமல் தன்னிடத்தில் முடங்கி இருக்க, வந்தியத்தேவனும் கீழே மயங்கி கிடந்ததை கவனித்தேன்.

ஆனால், பழுவேட்டையரோ என்னை கவனிக்காமல், நந்தினியை நோக்கி, "அடிபாதகி, உன் கொலைப் பழியை நிறைவேற்றி விட்டாயே..." என்று கத்திக் கொண்டே வந்தார்.

பழுவேட்டையரின் எதிர்பாராத விஜயத்தால், மேலும் குழப்பமடைந்த நந்தினி திணறி நிற்க, நான் சத்தமில்லாமல் நகன்று, வந்த வழியே திரும்பி ஓடி வந்து, காலமித்ராவில் ஏறி 'ரிட்டன்' பட்டனை தட்டி 2058க்கு திரும்பி வந்தேன்.

ஆதித்த கரிகாலரின் சூடான ரத்தம் வழிந்து கொண்டிருந்த கத்தியை, நேப்பியர் பாலத்திற்கு கீழே, கூவத்தில் வீசி எறிந்து விட்டு, காலமித்ராவை TTOவில் ஒப்படைத்து விட்டு, என் வீட்டுக்கு வந்தும், என்னுடைய நடுக்கம் மட்டும் குறையவே இல்லை.

ஹலோ! சரித்திர ஆய்வாளர்களே! கரிகாலரை கொன்ற கத்தியை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று கூவத்தை கிளறி, என்னை மாட்டிவிட்டு விடாதீர்கள்.

- எழுதியவர் ஸ்ரீதேவி
எழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928

Friday, November 23, 2007

மர்டர் மிஸ்ட்ரி - அத்தியாயம் இ

காலமித்ரா வந்து இறங்கிய இடத்தில், எண்ணிக்கையில் அடங்காத அளவிற்கு மக்கள் இருந்தனர். நூற்றுக்கணக்கில் அல்ல. ஆயிரக்கணக்கில் அல்ல. லட்சக்கணக்கில் இருந்தனர்! அனைவரும் சாதாரண மக்கள் அல்ல. போர் வீரர்கள்! ஆம். கையில் வாளும், கேடயமும் தாங்கி உக்கிரமாக போர் புரிந்து கொண்டிருந்தனர். குதிரைகளோடு குதிரைகளும், யானைகளோடு யானைகளும் கூட, சண்டை போட்டுக் கொண்டிருந்தன. இறந்த உடல்களோ மலை போல குவிந்து கிடக்க, ரத்த சேறுகளும், சதை துண்டுகளும் பல இடங்களில் சிதறி கிடந்தன.

லொக்கேஷன் ஸ்கிரீன் "திருப்புறம்பயம்" என்று காட்டியதை பார்த்ததும், எனக்கு அனைத்தும் விளங்கியது. அடடா! திருப்புறம்பயம் போரின் நடுவே அல்லவா வந்துள்ளேன்! காலமித்ரா காற்றைக் கிழித்துக் கொண்டு இக்களத்தில் தோன்றியதால், மிகப் பெரிய சலசலப்பு ஏற்பட்டது. அதனை விவரிக்கும் முன், இங்கு நடைபெற்று முடிந்த நிகழ்வுகளை விளக்குவது மிக அவசியம்.

லேட்டர் சோழாஸ் என்று அழைக்கப்படும் பிற்காலத்திய சோழர் பரம்பரையின், பிரசித்தி பெற்ற முதல் மன்னர் விஜயாலயச் சோழர். கிபி ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், வடக்கே பல்லவர்களும், தெற்கே பாண்டியர்களும் கோலோச்சி இருந்தனர். சோழ நாடு மிகச் சிறிய அரசாய் அப்போது இருந்தது.

பாண்டியர்களுக்கும், பல்லவர்களுக்கும், சிறு சிறு பிரச்சனைகளில் அடிக்கடி போர் மூள்வது வழக்கம். அதேபோல் இம்முறையும் , பாண்டிய மன்னர் வரகுண வர்மனுக்கும், பல்லவ மன்னர் அபராஜித வர்மனுக்கும், திருப்புறம்பயம் என்னும் கிராமத்தில் போர் நடந்தது. சோழர் குலம் தழைத்தோங்குவதற்கு, பாண்டியர்கள் தோல்வி அடைவது அவசியம் என்பதை உணர்ந்த விஜயாலயர், இந்தப் போரில் பல்லவர்களுக்கு உதவியாய் களம் இறங்கினார். விஜயாலயச் சோழரின் வீரத்தினால்தான் இப்போரில் பல்லவர்களுக்கு வெற்றி கிட்டியது என்பது வரலாறு. இப்போருக்கு பின்பு சோழர்கள் தங்கள் எல்லையை விரிவுபடுத்தி, மேலும் இரண்டு தலைமுறைக்குள் பெரிய சாம்ராஜ்யத்தையே தோற்றுவித்தனர். நானூறு வருடத்திற்கும் மேலாக நீடித்த இந்த சாம்ராஜ்யத்திற்கு அடித்தளமாய் அமைந்ததே திருப்புறம்பயம் போர் வெற்றிதான்.

இத்தகைய பிரசித்தி பெற்ற போரின் நடுவேதான் காலமித்ராவுடன் நான் வந்துள்ளேன். இரண்டு நாட்கள் முடிந்து, மூன்றாவது நாளாக, இப்போது போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. இரண்டு நாட்களாய் நடந்த போரில், பல்லவர்களுக்கும், சோழர்களுக்கும்தான் சேதம் அதிகமாக இருந்தது. பல்லவர்களின் பிரதான தளபதிகள் கடுமையாக தாக்கப்பட்டு பாசறையில் முடங்கிக் கிடந்தனர். வீரத்திலும், எண்ணிக்கையிலும் பாண்டியர்களின் கையே ஓங்கி இருந்தது. மூன்று நாள் போர் களைப்பே தெரியாமல், மீன் படையினர் பல்லவர்களை துவம்சம் செய்து கொண்டிருந்தனர். பாண்டிய நாட்டுத் தளபதிகளும், தங்களுடைய படை வீரர்களை கட்டுக் கோப்பாக நடத்திச் சென்று, சோழர்களை நொறுக்கிக் கொண்டிருந்தனர். எஞ்சியிருந்த சோழர்களும், பல்லவர்களும் தோல்வி முகத்தில், பின்வாங்க தயாராய் இருந்தனர். பாண்டியர்களுக்கு வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருந்த அந்தக் கடைசி நேரத்தில்தான், நானும் காலமித்ராவும் திருப்புறம்பயம் போர்க்களத்தில் திடீரென்று தோன்றினோம்.

என்னுடைய திடீர் வருகையால், போர்க்களத்தில் குழப்பமும், சலசலப்பும் தோன்றியது. இவன் பேயா, பிசாசா, தேவனா, மனிதனா என்று பயந்தனர். இது என்ன ரதம்! வித்தியாசமாக இருக்கிறதே! இவன் அணிந்திருக்கும் உடையும் வித்தியாசமாக இருக்கிறதே என்றெல்லாம் பாண்டியப் படையினர் என்னைப் பார்த்து குழம்பினர்! திகைத்தனர்! மிரண்டனர்!

சோழர்களுக்கு உதவ, கடவுளே மனித ரூபத்தில் வந்துள்ளார் என்கிற அளவில் அங்கு பீதி கிளம்பியது. பாண்டியப் படையினர் பின்வாங்கி, பதறி, சிதறி ஓடினர். பலவித வதந்திகளும், கற்பனைக் கதைகளும் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவ, மொத்த பாண்டிய படையினரும், தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியது. எஞ்சி நின்ற சிற்சில வீரர்களையும், சோழப் படையினர் விரட்ட, நிமிட நேரத்திற்குள் நிலைமை தலைகீழானது. பாண்டியப் படைக்கு தோல்வி! சோழர் படைக்கு வெற்றி! ஆஹா! திருப்புறம்பயம் போர் வெற்றிக்கு, நானும் அல்லவா ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளேன்! நினைக்கவே திரில்லாக இருந்தது.

அதற்குள் சோழ வீரர்கள் என்னை சூழ, காலமித்ராவில் இருந்து இறங்கி, அதன் கதவை பூட்டினேன். காலமித்ரா லாக் ஆகி இருக்கும்வரை, அதற்கு யாராலும் சேதம் விளைவிக்க முடியாது. நான் இறங்கியதும், சுற்றியுள்ள வீரர்களில் தலைவன் போல் இருந்தவன் என்னை அணுகி, தங்கள் அரசர் என்னை அழைப்பதாய் கூறினான்.

விஜயாலயர் என்னை அழைக்கிறார். அவரை நேரில் சந்திக்கப் போகிறேன். போர் வெற்றிக் களிப்பில், எனக்கு பரிசு ஏதும் கொடுப்பாரோ? என்றெல்லாம் யோசித்துக் கொண்டே சோழர் பாசறைக்கு நடந்தேன்.

போரில் தொண்ணூற்றாறு விழுப்புண்களை விஜயாலயர் பெற்றார் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. தொண்ணூற்றி ஆறு இருக்குமா என்று தெரியவில்லை. எனினும் கடுமையான காயங்கள் பல அவர் உடலில் இருக்க, மருத்துவர்கள் குழு, அவருக்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தது.

கை கூப்பி விஜயாலரை வணங்கினேன். ஆனால், அவரோ என் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் கண்களில் கோபம் கொப்பளித்தது. வார்த்தைகளில் நெருப்பின் சீற்றம் இருந்தது.

"யாரடா நீ?" என்று கேட்டார்.

"ஒரு வழிப் போக்கன்" என்றேன்.

"வழிப் போக்கனுக்கு போர்க்களத்தில் என்ன வேலை?"

"வேடிக்கை பார்க்க வந்தேன்!"

"போர் என்ன வேடிக்கை விஷயமா? எங்களுடைய வாள் பலத்தையும், புஜபலத்தையும் காட்டி வெல்ல வேண்டிய போர் அல்லவா இது? நீ ஏதோ சித்து வேலைகள் செய்து, பயமுறுத்தி அவர்களை விரட்டி விட்டாயே? மாய மந்திரத்தில் வெற்றி பெற்றார்கள் சோழர்கள் என்ற அவச்சொல் வரக் காரணமாக இருந்து விட்டாயே! துரோகி!" என்று கோபத்தில் வெடித்தார் விஜயாலயர்.

எனக்கு உதறல் எடுத்தது. பயத்தில் நடுங்கினேன். வியர்வை ஆறாய் ஓட ஆரம்பித்தது.

"நீ எந்த நாடு?"

"இந்திய நாடு"

"அது எங்கே இருக்கிறது? பல்லவ நாட்டிற்கு அருகிலா?"

"இல்லை. இந்திய நாட்டிற்குள்தான் பல்லவ நாடும், சோழ நாடும் உள்ளது!" என்று நான் கூறியதும், விஜயாலயருக்கு கோபம் தலைக்கேறியது.

"இவன் நிச்சயம் வேற்று நாட்டு ஒற்றன்தான். மாறு வேடத்தில், நம் புகழை கெடுக்க வந்துள்ளான். மந்திரங்கள் கற்றவனாகவும் உள்ளான். இவனை சும்மா விடக்கூடாது. இந்த அதிகப்பிரசங்கியை சிரச்சேதம் செய்யுங்கள்!" என்று தன் வீரர்களுக்கு கட்டளையிட்டார்.

விஜயாலயச் சோழரின் ஆவேசக் கட்டளையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான், "ஐயா, நான் ஏதோ உளறியதை, பெரிய மனது பண்ணி மன்னிக்க வேண்டும். நான் ஒரு சாதாரண பயணிதான். ஒற்றன் அல்ல. பல்லவத் தலைநகரம் காஞ்சி மாநகருக்கு அருகே உள்ள சென்னை என்னும் குக்கிராமத்தில்தான் நான் வசிக்கிறேன்! நான் செய்த பிழைகளை தயவு கூர்ந்து பொறுத்து அருள வேண்டும்!" என்று மன்னிப்பு கேட்டதும், விஜயாலயச் சோழர் சிறிது நேரம் சிந்தித்தார்.

தன் தொண்டையை செருமிக் கொண்டு, "நீ ஒற்றன் அல்ல என்று ஒப்புக் கொள்கிறேன். எனினும், மாய மந்திரத்தில் சோழன் வெற்றி பெற்றான் என்ற அவச்சொல் வருவதில் எனக்கு விருப்பமில்லை. உனக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன். என்னுடைய வீரன் ஒருவனுடன் நீ கத்திச் சண்டை போட வேண்டும்! நீ வெற்றி பெற்றால் உன்னை உயிருடன் விட்டு விடுகிறேன். இல்லையேல், உன்னை வென்று, எங்கள் மீது வரும் அவச்சொல்லை போக்கி விடுகிறேன்." என்று உரத்த குரலில் முழக்கமிட்டு, வஜ்ரவேலன் என்ற ஒரு வீரனை அழைத்தார்.

என்னடா இது! பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் மாறி விட்டது. தண்டனையில் இருந்து தப்பிக்க வழி தேடினால், சிக்கல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல, பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. எப்படியாவது இங்கிருந்து தப்பி, காலமித்ராவிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, என் கையில் கத்தி ஒன்று திணிக்கப்பட்டது.

என்னுடன் கத்திச் சண்டை போட வஜ்ரவேலன் தயாரானான். வேறு வழியில்லை. நானும் கத்தியைச் சுழற்றி அவனுடன் சண்டை போட ஆரம்பித்தேன். ஒண்டிக்கு ஒண்டி என்பதால் எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. நானும் சம்மர் கோர்ஸில் சிலம்பம், டேக்வாண்டோ, கராத்தே போன்றவை பயின்றுள்ளேன். எனவே என்னால் முடிந்தவரை நன்றாகவே சண்டை போட்டேன். எனினும் வஜ்ரவேலன்ம் வித்தை தெரிந்தவனாக இருந்ததால், அவன் கையே ஓங்கியிருக்க, நான் தற்காப்பு மட்டுமே பண்ணினேன். பழங்கால எம்ஜியார் பட... இல்லை, இல்லை. எதிர்காலத்தில் வர இருக்கும் எம்ஜியார் பட வாள் சண்டைகள் என் நினைவுக்கு வர, சிறிது ஆக்ரோஷமாக சண்டையிட்டேன்.

நேரம் ஆக ஆக என் வேகம் குறைய ஆரம்பித்தது. இயற்கையிலேயே அவன் வீரனாய் இருந்ததாலும், சுற்றிலும் வீரர்கள் அவனுக்கு சப்போர்ட் பண்ணியதாலும், என் கைகள் தளர ஆரம்பித்தன. வெகு விரைவில், என் கத்தியை தட்டிவிட்டு விட்டு என்னை கொன்று விடுவான் வஜ்ரவேலன், என்று தோன்றியது. ஏதேனும் செய்ய வேண்டும். இல்லையேல் கதை கந்தலாகி விடும். மின்னல் போல ஒரு ஐடியா திடீரென்று தோன்றியது.

"பண்டைய தமிழர்கள் புறமுதுகு காட்டி ஓடும் நபர்களை தாக்க மாட்டார்கள்!"

இந்த எண்ணம் தோன்றியதுமே, சண்டையிலிருந்து சட்டென்று விலகி, சுற்றியுள்ள வீரர்களை தள்ளி விட்டு, திரும்பி பார்க்காமல் ஓட ஆரம்பித்தேன். ஓட்டம் என்றால் ஓட்டம்! அப்படியொரு ஓட்டம்! பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடினேன். ஓடிச்சென்று காலமித்ராவில் ஏறி அமர்ந்து, அதனை ஆர்டினரி மோடிற்கு மாற்றி, வெகு தொலைவிற்கு ஓட்டிச் சென்றேன். சோழ வீரர்கள் சிறிது தூரம் என்னை பின் தொடர்ந்து வந்தனர். பின்பு நின்று விட்டனர்.

ஒரு முப்பது நாற்பது கி..மீ. தொலைவு சென்றதும், ஆள் அரவமற்ற ஓரிடத்தில் நின்று என்னை ஆசுவாசப்படுத்தினேன். ஏதோ, இந்த மட்டிற்கு பிரச்சனை முடிந்ததே! இனி இதேபோல் தவறு செய்யக் கூடாது, என்று எண்ணிக் கொண்டேன். முதலில் என் உடைகளை மாற்ற வேண்டும்.

ஏற்கனவே வாங்கி வந்திருந்த சோழர் கால உடையில் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டேன். விஜயாலயர் கத்தியை இடுப்பில் செருகிக் கொண்டேன். தலைப்பாகையை சுற்றிக் கொண்டேன். ஷூவை கழற்றி விட்டு, மரச் செருப்பிற்கு மாறினேன். தலையை வேறு மாதிரி வகிடு எடுத்து சீவினேன். இப்போது கண்ணாடியில் என்னைப் பார்த்தால் எனக்கே அடையாளம் தெரியவில்லை. அசல் சோழ நாட்டு பிரஜை போலவே மாறி இருந்தேன்.

சோழ நாட்டு மேப்பை விரித்து வைத்து, கடம்பூர் அரண்மனை எங்கு உள்ளது என்று சரியாக குறித்துக் கொண்டேன். காலமித்ராவை டைம் மோடிற்கு மாற்றி, சரியான தேதியை டைப் செய்தேன். லொக்கேஷனுக்கு கடம்பூர் டிகிரியை எண்டர் செய்தேன். மீண்டும் ஒருமுறை அனைத்து டேட்டாவையும் சரிபார்த்துக் கொண்டேன். ஓகேதான் என்று உறுதியானதும், படபடக்கும் நெஞ்சோடு 'கோ' பட்டனை அழுத்தினேன்.

விர்ரூரூம்...

- எழுதிக் கொண்டிருப்பவர் ஸ்ரீதேவி
எழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928