Showing posts with label குறுநாவல். Show all posts
Showing posts with label குறுநாவல். Show all posts

Monday, September 09, 2013

பொன்னியின் ‘செல்’வன்


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- குந்தவை 9900022244
Date :- 30-09-0969


தேவி,

நந்தினியின் மிரட்டலை மீறி, ஆ.கரிகாலர் அருகிலேயே இருந்து அவரை பாதுகாத்து வருகிறேன். இருப்பினும் இங்கு நடைபெறும் பேச்சு வார்த்தைகளும், சம்பவங்களும் சற்று காரசாரமாகவே உள்ளன. 'என்ன நடக்குமோ?' என்று பயமாக உள்ளது.

பி.கு. :-

சக்ரவர்த்தி, பொன்னியின் செல்வர் இருவருக்குமே ஆபத்து இருப்பது போல உள்ளது.  அவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கவும்.

x-----x



Sender :- கடம்பூர் சம்புவரையர் 9900050001
Receiver :- பெரிய பழுவேட்டையர் 9900040001
Date :- 30-09-0969


சோழ நாட்டின் பெருந் தனாதிகாரி அவர்களே,

வந்தியத் தேவன் இங்கு வந்து, இளவரசரிடம் ஏதோ சொல்லியுள்ளான். அதிலிருந்து, அவர், மட்டு மரியாதை இல்லாமல், அனைவரையும் எடுத்தெறிந்து பேசுகிறார். என் வீட்டில் ஏடாகூடம் ஏதும் நடந்து விடுமோ என்று அஞ்சுகிறேன்.

x-----x


Sender :- பெரிய பழுவேட்டையர் 9900040001
Receiver :- கடம்பூர் சம்புவரையர் 9900050001
Date :- 30-09-0969


சம்புவரையரே,

சோழ நாட்டை, இரண்டாக பிரிக்கும் யோசனைக்கு, கரிகாலன் ஒத்துக் கொண்டு, நாம் விரும்பியபடி காரியம் நடந்தால் நல்லது. இல்லையேல் மோசம் ஒன்றுமில்லை. Don't worry.

x-----x


Sender :- பெரிய பழுவேட்டையர் 9900040001
Receiver :- குந்தவை 9900022244
Date :- 30-09-0969


ஐயோ, இளவரசி,

சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் ஏற்பட்டதற்காக, என் அரண்மணையில், என் முதுகிற்கு பின்னே, எவ்வளவு பெரிய சதி இடம்பெற அனுமதித்துள்ளேன். நூற்றாண்டுகால பழுவூர் - சோழ உறவிற்கு களங்கம் எற்படுத்தி விட்டேனே. ஐயகோ! பாண்டியன் ஆபத்துதவிகள், ஒரே நாளில் அரசர் மற்றும் 2 இளவரசர்களின் உயிருக்கு குறி வைத்துள்ளனர். ஒரு நாசகாரியை, நல்லவள் என்று நம்பி, மனையாளாக்கியதன் வினை இது. அம்மணி, அரசரையும், அருள்மொழியையும் காப்பது உன் பொறுப்பு. கரிகாலனை காப்பாற்ற நானே கடம்பூர் செல்கிறேன்.

x-----x


Sender :- கடம்பூர் சம்புவரையர் 9900050001
Receiver :- சுந்தரச் சோழர் 9900011111
Date :- 03-10-0969


சோழ சக்ரவர்த்திக்கு,

கடம்பூர் அரசர் சம்புவரையர் வருத்தத்துடன் அனுப்பும் செய்தி. சேவூர் போர்க்களத்தில் பாண்டிய படைகளை சூறையாடிய இளவரசர் ஆதித்த கரிகாலர், இன்று எதிரிகளின் சூழ்ச்சியால் அகால மரணமடைந்தார். தங்கள் மகனை கொன்ற எதிரி வந்தியத்தேவனை சிறைப் பிடித்து வைத்துள்ளேன்.

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- குந்தவை 9900022244
Date :- 03-10-0969


Sorry இளவரசி. ஆ.கரிகாலரை காப்பாற்ற இயலவில்லை. என்னை மயக்கமடைய வைத்து, கரிகாலரை கொலை செய்து உள்ளார்கள். But, பழியை என் மீது போடுகிறார்கள். என்னை காப்பாற்றுங்கள்.

பி.கு.:-

பெ.பழுவேட்டையர் மனது வைத்தால் என்னை நிச்சயம் காப்பாற்றலாம்.


x-----x


Sender :- குந்தவை 9900022244
Receiver :- அருள்மொழி வர்மர் 9900033333
Date :- 06-10-0969


தம்பி,

கடவுள் அருளால், நீயும், தந்தையும் உயிர் தப்பி விட்டீர்கள். எனினும், கரிகாலனை கொலை செய்ததாக பழி சுமத்தப்பட்டு வந்தியத்தேவர் சிறைபட்டிருக்கிறார். அவருக்கு நீ உதவ வேண்டும்.

x-----x


Sender :- அருள்மொழி வர்மர் 9900033333
Receiver :- குந்தவை 9900022244
Date :- 06-10-0969


அக்கா,

அண்ணனை கொலை செய்ய வந்தியத்தேவரை, நான்தான் ஏவியுள்ளேன் என்று கடம்பூர்காரர்கள் வதந்தி பரப்பியுள்ளனர். சிறை நிர்வாகத்தை வேறு, சி.பழுவேட்டையரிடமிருந்து வலுக்கட்டாயமாக பெரிய வேளார், பூதி விக்கிரமகேசரி பறித்துள்ளார். வந்தியத்தேவர் நிரபராதி என்பதை நன்கு அறிந்தும், என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறேன்.

x-----x


Sender :- குந்தவை 9900022244
Receiver :- அருள்மொழி வர்மர் 9900033333
Date :- 07-10-0969


தம்பி,

மக்கள் அனைவரும் அடுத்த அரசராக உன்னையே ஆக்க வேண்டும் என்கின்றனர். பெரிய வேளாளரிடம் பேசினேன். அவரும் அதையே வலியுறுத்துகிறார். நீ அரசராகி, வ.தேவரை விடுதலை செய்ய கட்டளையிட்டால், அதை விருப்பத்துடன் obey பண்ணுவதாய் கூறுகிறார். what to do? I'm also in confusion.

x-----x


Sender :- அருள்மொழி வர்மர் 9900033333
Receiver :- குந்தவை 9900022244
Date :- 07-10-0969


அக்கா,

நீ confuse ஆவதில் அர்த்தமே இல்லை. பெரிய வேளாளர் நிர்பந்தித்தாலும், நீயே வலியுறுத்தினாலும், மக்கள் போராட்டமே நடத்தினாலும், நான் அரசராக விரும்பவில்லை. அனாவசியமாய் என் மீது, சிறு சந்தேகம் எற்படுவதையும் விரும்பவில்லை. வந்தியத்தேவரை கடவுள் காப்பாற்றுவார்.

x-----x


Sender :- குந்தவை 9900022244
Receiver :- அருள்மொழி வர்மர் 9900033333
Date :- 08-10-0969


தம்பி,

கரிகாலன் கொலையுண்ட சமயத்தில், நடந்த விஷயத்தை அறிந்த ஒரே நபர் பெ.பழுவேட்டையர்தான். அவர் உண்மையைக் கூறினால், வ.தேவர் தப்பிப்பார். எனினும், அவரை கேள்வி கேட்க, தந்தையே விரும்ப மாட்டாரே? அவராக உண்மையை கூறினால்தான் உண்டு.

x-----x


Sender :- பெரிய பழுவேட்டையர் 9900040001
Receiver :- சுந்தரச் சோழர் 9900011111
Date :- 10-10-0969


மகாராஜா,

இளவரசரை காப்பாற்ற முடியாததற்கு என்னை மன்னிக்கவும். இளவரசரை கொன்றது என் மனைவி நந்தினியே. எனக்குத் தெரியாமலேயே, என் முதுகிற்கு பின்னே, இந்த சதியை நடத்தி முடித்து தப்பி ஓடி விட்டாள். இதற்கு தார்மீக பொறுப்பேற்று என்னை நானே மாய்த்துக் கொள்கிறேன். வந்தியத்தேவன் நிரபராதி. மேலும், சோழநாட்டு மகுடத்திற்கு மதுராந்தகனை விட பொன்னியின் செல்வரே தகுதியானவர். மக்களும் அவரையே விரும்புகின்றனர். அவரையே அடுத்து அரசராக்கவும். வாழ்க சோழநாடு.

x-----x

Sender :- அருள்மொழி வர்மர் 9900033333
Receiver :- சுந்தரச் சோழர் 9900011111
Date :- 12-10-0969


அப்பா,

அண்ணன் கொலையுண்ட சிறிது நாட்களில் தம்பி அரியணை ஏறினால், என் மீதுதான் தவறான சந்தேகம் வரும். என் சிற்றப்பா மதுராந்தகர், என்னை விட வயதில் மூத்தவர். சிவபக்தர். அரசராக எல்லா தகுதியும் உடையவர். அவரையே, அரசராக நியமிக்கும்படி தங்களை கேட்டுக் கொள்கிறேன் அவரின் கீழ் சாதாரண வீரனாய் பணிபுரியவே நான் விரும்புகிறேன்!

x-----x


Sender :- CHOLACEL Service centre 9900099000
Receiver :- All CHOLACELLERS 99000xxxxx
Date :- 20-10-0969

அன்பு குடிமக்களே,

என் தம்பியும், கண்டராதித்தரின் புதல்வனும், சிறந்த சிவநேசனுமாகிய மதுராந்தகன் என்ற உத்தமச் சோழனை இன்று முதல் அரசனாக மகுடம் சூட்டுகிறேன். அவர் ஆட்சியில் சோழர் குலம் தழைத்தோங்க வாழ்த்துகிறேன். அடுத்தவாரம், என் செல்வ புதல்வி குந்தவைக்கும், வாணர் குல வீரர் வந்தியத் தேவனுக்கும் சிறப்பான முறையில் திருமணம் நடைபெற உள்ளது. அனைத்து குடிமக்களும் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்தும்படி அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த சந்தோஷ நிகழ்வுகளுக்கு பரிசாக, அனைத்து குடிமக்களும், Lifetime free incoming வசதியுடன் கூடிய Simcardம், "Cholokia" செல்ஃபோன் ஒன்றையும் இலவசமாக பெற்றுக் கொள்ளவும்! வாழ்க சோழநாடு!!

- சுந்தரச் சோழர்.

x-----x

கதை வாசித்த சில இணைய நண்பர்கள், பல characters பற்றி கேட்டிருந்தார்கள். அவர்களுக்காக,

1. ஆழ்வார்கடியான், அநிருத்தரின் messages CRIPT ஆகி உள்ளதால் அதனை decode பண்ணும் வேலை நடைபெறுகிறது.
2.பூங்குழலி cellஐ bay of bengalல் தவற விட்டு விட்டாள்.
3. வானதி cellஐ கொடும்பாளுரில் மறந்து வைத்து விட்டாள்.
4. ரவிதாஸன் ரோமிங்கில் இருப்பதால் cellஐ use பண்ணவே இல்லை.
5. ஊமை ராணிக்கு பலவித ringtones கேட்டதால்தான் பைத்தியம் பிடித்துள்ளது.
6.மணிமேகலை games ஆட மட்டுமே cellphone உபயோகித்துள்ளாள்.
-ஸ்ரீதேவி

** மணிமேகலை பிரசுரம் “என் பள்ளிக்கூடத்திற்கு வந்த ரோபோ” சிறுகதை தொகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற கதை**

Saturday, September 07, 2013

பொன்னியின் ‘செல்’வன்


Sender :- குந்தவை 9900022244
Receiver :- வந்தியத்தேவன் 9900077007
Date :- 14-08-0969


வந்தியத்தேவரே,

நீர் உடனே இலங்கை சென்று என் இளைய தம்பி அருள்மொழிவர்மனை அழைத்து வரவும்.

பி.கு.:-

அரச குலத்தவரிடம் அதிகபிரசங்கித்தனம் இல்லாமல் சற்று பணிவாக இருப்பது நல்லது.

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- குந்தவை 9900022244
Date :- 14-08-0969


பெருமதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய குந்தவை தேவிக்கு!

தங்கள் தம்பிக்கு ஒரு SMS அனுப்பக்கூடாதா? இதற்காக நான் கடல் கடந்து செல்ல வேண்டுமா?

பி.கு.:-

எப்படி என் பணிவு?!

x-----x


Sender :- குந்தவை 9900022244
Receiver :- வந்தியத்தேவன் 9900077007
Date :- 14-08-0969


வாணர் குல வீரரே(?),

இலங்கையில் தற்போது போர்க்காலமாக இருப்பதால், செல்ஃபோன் லைன்கள் சரிவர வேலை செய்யவில்லை. எனவேதான் உம்மை அனுப்புகிறேன்.

பி.கு.:-

கடல் பயணம் செய்ய அவ்வளவு பயமா? சரியான பயந்தாங்கொள்ளியாக இருப்பீரோ? சின்ன பழுவேட்டையரிடம் சிக்காமல் கவனமாக சென்று வரவும்!

x-----x

Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- குந்தவை 9900022244
Date :- 12-09-0969


தேவி!

இலங்கை அநுராதபுரத்தில் இருந்து தங்கள் தம்பியை அழைத்து வந்த கதையை, ஒரு அத்தியாயமே எழுதலாம். நேரில், I will explain it(தங்களின் காந்தக் கண்கள் என்னை

Disturb செய்யாமல் இருந்தால்!). Now, நானும் பொன்னியின் செல்வரும், யானைத் துறவில் இருந்து, கப்பலில் நாகப்பட்டினத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம். என் வேலையை வெற்றிகரமாக முடித்து விட்டு, தங்களின் மலர்ந்த முகத்தை தரிசிக்க ஆவலாக உள்ளேன்.

பி.கு.:-

தங்களின் இதய சிம்மாசனம் காலியாக உள்ளதா?

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- குந்தவை 9900022244
Date :- 17-09-0969


இளவரசி,

வழியில் புயற்காற்றினால், கப்பல் கவிழ்ந்து accident. But, Narrow escape. இளைய இளவரசர் நாகை புத்தர் கோவிலில் உள்ளார். அவருக்கு காய்ச்சல் வேறு. புத்த துறவிகள் இளவரசருக்கு மருத்துவ உதவிகள் செய்து வருகிறார்கள். I'm on the way to palayaarai.

பி.கு.:-

தங்களின் வேலையை அரைகுறையாக முடித்ததற்கு மன்னிக்கவும்.

x-----x


Sender :- அருள்மொழி வர்மர் 9900033333
Receiver :- குந்தவை 9900022244
Date :- 20-09-0969


அக்கா,

இறைவன் அருளாலும், நாகை பிட்சுகளின் தீவிர வைத்தியத்தினாலும், I'm fine. விரைவில் உன்னை நேரில் சந்திக்கிறேன். நீ அனுப்பிய தூதர், வெகு கெட்டிக்காரர். சிறந்த வீரர். அவராலேயே நான் இன்று உயிருடன் இருக்கிறேன்.

x-----x


Sender :- குந்தவை 9900022244
Receiver :- வந்தியத்தேவன் 9900077007
Date :- 20-09-0969


இனியவரே!

என் தம்பி உடல்நிலை செய்தி அறிந்து கடந்த 3 நாட்களாக கவலையில் இருந்தேன். ஆகவேதான், தங்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. Now, he is fine. அன்பரே!

தங்களின் வேலையை சிறப்பாகவே செய்து முடித்துள்ளீர்கள். இதற்காக, சோழர் குலமே தங்களுக்கு என்றென்றும் கடன்பட்டுள்ளது. நான்...

என் இதய சிம்மாசனத்தில் தங்களுக்கு மட்டுமே இடம் உண்டு!

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- குந்தவை 9900022244
Date :- 20-09-0969


தேவி,

நானோ வீடு, வாசல், பெற்றோர், உற்றோர் இல்லாத அனாதை. நீங்களோ, பரந்து விரிந்துள்ள சோழ சாம்ராஜ்ய சக்ரவர்த்தியின் ஒரே செல்வகுமாரி. தங்களின் தூய்மையான

இதயத்தில் நான் இடம்பிடித்தது, பெறற்கரிய பாக்கியமாகவே கருதுகிறேன். தங்களின் மணிக் கரங்களை பற்றுதற்குரிய அந்நன்னாள் விரைவில் வாராதோ?

x-----x


Sender :- நந்தினி 9900040002
Receiver :- ஆதித்த கரிகாலன் 9900022222
Date :- 22-09-0969


அரசிளங்குமரா,

நான், பழுவூர் இளையராணி நந்தினி. இராஜ்ய குழப்பங்களை பேசித் தீர்க்க கடம்பூர் அரண்மனைக்கு வருவீர்களா? Expecting your reply.

x-----x


Sender :- ஆதித்த கரிகாலன் 9900022222
Receiver :- நந்தினி 9900040002
Date :- 22-09-0969


பழுவூர் பாட்டி அவர்களே,

இன்று சோழ இராஜ்யத்தையே விரல் நுனியில் ஆட்டிப் படைக்கும் சர்வ வல்லமை படைத்த, நந்தினி தேவியாரின் கோரிக்கையை மீற நான் யார்? கண்டிப்பாக வருகிறேன்.



Sender :- குந்தவை 9900022244
Receiver :- ஆதித்த கரிகாலன் 9900022222
Date :- 23-09-0969


அண்ணா,

நந்தினி பிறப்பால் பாண்டிய நாட்டாள். வீரபாண்டியன் ஆபத்துதவிகளிடம் அவளுக்கு தொடர்பு உள்ளது. அவள் உன்னை கடம்பூர் அரண்மனைக்கு அழைப்பதில் வேறு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. எனவே, அவளின் கடம்பூர் அழைப்பை நிராகரித்து விடு.

x-----x


Sender :- குந்தவை 9900022244
Receiver :- வந்தியத்தேவன் 9900077007
Date :- 25-09-0969


வந்தியத்தேவரே,

நந்தினி கரிகாலனை பேச்சுவார்த்தை நடத்த கடம்பூர் அரண்மனைக்கு அழைத்திருக்கிறாள். வீரபாண்டியன் மறைவுக்கு பழிவாங்க முற்படுகிறாளோ என சந்தேகிக்கிறேன்.

கரிகாலன் என் பேச்சை மீறி கடம்பூர் செல்கிறான். அவனை எப்படியாவது தடுத்து நிறுத்த முயற்சிக்கவும். அது முடியவில்லையெனில், அவனருகிலேயே இருந்து அவனை பாதுகாக்கவும்.

x-----x


Sender :- நந்தினி 9900040002
Receiver :- வந்தியத்தேவன் 9900077007
Date :- 26-09-0969


வந்தியத்தேவா,

அந்த பழையாறை பிசாசின் பேச்சைக் கேட்டு கடம்பூர் வந்தால், உமக்கு பல பிரச்சனைகள் வரும். ஏற்கனவே, ஒருமுறை என்னை ஏமாற்றியதற்கும் சேர்த்து கடுமையான விளைவுகளை சந்திப்பீர்.

தொடரும்...

Friday, September 06, 2013

பொன்னியின் ‘செல்’வன்


பொன்னியின்  செல்வன் - முன் குறிப்பு
இந்தக் கதை பொன்னியின் செல்வன் கதையை கிண்டல் செய்யும் 

நோக்கத்துடன் எழுதப் பட்டதல்ல. பொன்னியின் செல்வன் கதையின் பால் 

ஏற்பட்ட ஈர்ப்பினாலேயே எழுதப் பட்டது.

- ஸ்ரீதேவி

தஞ்சாவூருக்கு அருகேயுள்ள சித்திரக்குடி என்னும் கிராமத்தில், சமீபத்தில்

நடந்த அகழ்வாராய்ச்சியில், Archeological Survey of Indiaவிற்கு, 1000

வருடத்திற்கு முந்தைய Hard disk கிடைத்துள்ளது. அதன் databaseஐ

ஆராய்ந்த போது, "CHOLACEL" என்ற செல்ஃபோன் கம்பெனியின் SMS

விபரங்கள் அதில் இருந்ததன. ASI வெளியிட்டுள்ள அந்த databaseல்

இருந்து, சில interesting SMSs இதோ....



Sender :- ஆதித்த கரிகாலன் 9900022222
Receiver :- வந்தியத்தேவன் 9900077007
Date :- 03-08-0969


நண்பா! வந்தியத்தேவா!

என் தந்தை சுந்தரச் சோழரை, பழுவேட்டையர்கள் இருவரும்

சந்தேகிக்காதபடி, எவ்வாறாவது நேரில் சந்தித்து, கீழ்கண்ட Messageயை

காண்பிக்கவும். பின்பு, என் தங்கை குந்தவையை contact பண்ணவும். என்

சிற்றப்பா மதுராந்தகனை அடுத்த அரசனாக்க பழுவேட்டையர்கள் சதி

செய்கிறார்கள். எனவே கவனமாக காரியத்தை முடிக்கவும்.


Message Attached :-

Dad,

வீரபாண்டியனின் ஆபத்துதவிகளால், தங்களுக்கு அபாயம் அதிகரித்துள்ளது.

இராஜ்யத்திலும் குழப்பமான நிலை உள்ளது. எனவே, காஞ்சியில் நான்

கட்டியுள்ள பொன்மாளிகைக்கு உடனே கிளம்பி வரவும்.

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- நந்தினி 9900040002
Date :- 08-08-0969


பெரிய பழுவேட்டையரின் இளைய ராணி நந்தினி தேவிக்கு,

தஞ்சை சாலையில், என்னுடைய குதிரை மீது தங்களின் பல்லக்கு

மோதியதே? நினைவுள்ளதா? வாணர் குல வந்தியத் தேவன் நான் தான். I

need one help. அரசர் சுந்தரச் சோழரை நேரில் சந்திக்க ஆசை. Help பண்ண

முடியுமா?

x-----x


Sender :- நந்தினி 9900040002
Receiver :- வந்தியத்தேவன் 9900077007
Date :- 08-08-0969


கோட்டைக் காவலர் சின்ன பழுவேட்டையருக்கு Message அனுப்புகிறேன்.

அவர் உம்மை அரண்மனையினுள் செல்ல அனுமதி அளிப்பார். பதிலுக்கு

உம்மால் எனக்கும் சில காரியங்கள் ஆக வேண்டியுள்ளது. அரசரை மீட்

பண்ணியதும் என்னை நேரில் சந்திக்க வேண்டும். O.K.யா?

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- நந்தினி 9900040002
Date :- 08-08-0969


O.K.

x-----x


Sender :- நந்தினி 9900040002
Receiver :- சின்ன பழுவேட்டயர் 9900040003
Date :- 08-08-0969


வந்தியத்தேவன் என்பவர் அரசரை பார்க்க வருவார். Allow பண்ணவும்.

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- ஆதித்த கரிகாலன் 9900022222
Date :- 10-08-0969


இளவரசே,

தங்கள் தந்தையை நேரில் Meet பண்ணி, Messageயை காண்பித்து விட்டேன்.

But, அரசர் காஞ்சிக்கு வரும் moodல் இல்லை. சி.பழுவேட்டையர் என்னை

ஒற்றன் என சந்தேகிக்கிறார். Anyway, நான் அவரை ஏமாற்றி தப்பி

விட்டேன்.

x-----x


Sender :- நந்தினி 9900040002
Receiver :- வந்தியத்தேவன் 9900077007
Date :- 10-08-0969


வந்தியத்தேவரே,

தங்களை ஒற்றன் என்று சின்ன பழுவேட்டையர் சந்தேகிக்கிறார். என்னை

ஏமாற்றி விட்டீரோ? எனக்கு அலுவல் புரிய வருவீரா?

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- நந்தினி 9900040002
Date :- 10-08-0969


மேடம்,

நான் குந்தவைக்கு வேலை புரிய வந்துள்ளேன். So, தங்களுக்கு help பண்ண

முடியாமைக்கு வருந்துகிறேன். Anyway, Thanks for your help.

x-----x


Sender :- ஆதித்த கரிகாலன் 9900022222
Receiver :- குந்தவை 9900022244
Date :- 10-08-0969


குந்தவை,

எந்த வேலையையும் வெற்றிகரமாக முடிக்க கூடிய வீரன் வேண்டுமென்று

கேட்டிருந்தாயே? என் நண்பன் வந்தியத்தேவன், உன்னை விரைவில் contact

பண்ணுவான். His No is 9900077007.

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- குந்தவை 9900022244
Date :- 14-08-0969


சோழர் குல விளக்கு! பழையாறை இளவரசி! சேவூர் போரில்

வீரபாண்டியனின் தலை கொய்த ஆ.கரிகாலனின் அன்பு தங்கை!

பொன்னியின் செல்வர் அருள்மொழியின் பிரியமுள்ள தமக்கை! தங்கத்

தலைவி! சிங்கச் செல்வி! இளைய பிராட்டி குந்தவை தேவியாரே!

நான் வந்தியத்தேவன். இளவரசர் ஆ.கரிகாலரின் கட்டளையின் பேரில்

வந்துள்ளேன். I'm at your service.

தொடரும்...