Thursday, October 17, 2013

எண்பது நாட்களில் உலகை சுற்றிய பயணம்

”எண்பது நாட்களில் உலகத்தை சுற்றி வர தன்னால் முடியும் என்று கதையின் நாயகர் பீலியாஸ் போக், தன் நண்பர்களிடம், மிகப் பெரிய தொகையை பந்தயம் கட்டுகிறார். அன்றிரவே லண்டனிலிருந்து பயணத்தை தொடங்கியும் விடுகிறார்!

நீராவி இன்ஜின்கள், புகை வண்டிகளைத் தவிர வேறெந்த இயந்திர வாகனங்களும் கண்டுபிடிக்கப்படாத 1872ம் வருடம் அது. புயல், மழை தாமதங்கள், ரயில் தாமதங்கள், செவ்விந்திய கொள்ளையர்கள் என பலவித இடைஞ்சல்கள் வருகின்றன. வங்கிக் கொள்ளையராய் இருப்பாரோ என்ற சந்தேகம் வேறு அவரைத் துரத்துகிறது. பயணிகள் கப்பல், ரயில், வணிக கப்பல், பாய்மரப் படகு, பனிச்சறுக்கு படகு, யானைப் பயணம் என்று அனைத்து வித வழிகளிலும் பயணம் செய்கிறார். இறுதியில் பந்தயத்தில் வெல்கிறாரா? அல்லது தன் சொத்தை இழக்கிறாரா? அல்லது உண்மையில் அவர் கொள்ளையர்தானா?
பரபரப்பாக நகரும் கதையின் இறுதியில் வரும் எதிர்பாராத திருப்பமே, நூறாண்டுகளுக்கும் மேலாக, இன்றும், இக்கதையை வெற்றிகரமானதாக ரசிக்க வைக்கின்றது...!”

நாடு, மொழி, இனம் கடந்து பல தலைமுறைகளால் ரசிக்கப்படும், பிரபல ஃபிரன்சு எழுத்தாளர் ஜூல் வெர்னேவின் சாகாவரம் பெற்ற நாவல் “AROUND THE WORLD IN EIGHTY DAYS" தமிழில், ஸ்ரீதேவியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது..!

நாவலை வாங்க விருப்பமுள்ளவர்கள் நுழைய வேண்டிய இணைப்பு
http://www.amazon.com/Around-World-eighty-Jules-Version/dp/1456559222/ref=sr_1_1?s=books&ie=UTF8&qid=1381986449&sr=1-1&keywords=sridevi